"யாரும் தப்ப முடியாது! அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்" டெல்லி கார் வெடிப்பு! பிரதமர் மோடி திட்டவட்டம்
டெல்லி: செங்கோட்டை அருகே கார் விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாகப் பிரதமர் மோடி சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். இந்த கார் விபத்தில் உயிரிழந்தோருடன் ஒட்டுமொத்த நாடும் உடன் நிற்கும் என்ற அவர், இந்த வெடிப்பிற்குக் காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார்.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்றைய தினம் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் நடந்த இந்த வெடிப்புச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இந்த கார் வெடிப்பு தொடர்பாகப் பிரதமர் மோடி சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். பூட்டான் நாட்டிற்கு அரசு முறை பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது கார் வெடிப்பு குறித்துப் பேசினார்.
டெல்லி கார் வெடிப்புக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்ற பிரதமர் மோடி, குற்றவாளிகள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் ஒட்டுமொத்தத் தேசமும் பாதிக்கப்பட்டவர்களுடன் துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நேற்றிரவு முழுக்க இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் அனைத்து ஏஜென்சிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் இந்தச் சதித்திட்டத்தின் ஆழம் வரை சென்று விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications