இஸ்ரேலிலிருந்து திடீரென வந்த போன் கால்.. பிரதமர் மோடிக்கு வாக்கு கொடுத்த நெதன்யாகு!
டெல்லி: சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து உரையாடியிருக்கிறார். மோடியை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் நெதன்யாகு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் விவகாரத்தில் சமீப காலமாக இந்தியா தொடர்ந்து நெருக்கமாக இருந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. "பாலஸ்தீன விஷயத்தில் இஸ்ரேலின் நடவடிக்கை சரி கிடையாது. சர்வதேச போர் விதிகளை மீறி ஆயிரக்கணக்கானவர்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது. தனி பாலஸ்தீனம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வந்தது. ஆனால், இப்போது பாலஸ்தீனத்திற்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருக்கிறது" என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில்தான் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு நலம் விசாரித்திருக்கிறார். இந்த தொலைபேசி உரையாடல் குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "பிரதமர் நரேந்திர மோடிக்கு, இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இந்தியா-இஸ்ரேல் ராஜதந்திர உறவு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர், மேலும் இரு நாட்டு நன்மைக்காக இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் உறுதி ஏற்று இருக்கின்றனர்.
பயங்கரவாதத்தை இரு தலைவர்களும் கடுமையாகக் கண்டித்தனர். மேலும், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகள் மீதான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை மீண்டும் வலியுறுத்தினர். மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். காசா அமைதித் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவது உட்பட, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை நோக்கிய முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, இரு தலைவர்களும் மிக விரைவில் சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இஸ்ரேல் அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் இந்தியா வருவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. இருப்பினும் செப்.8ம் தேதி அவர் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications