Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்ரேலிலிருந்து திடீரென வந்த போன் கால்.. பிரதமர் மோடிக்கு வாக்கு கொடுத்த நெதன்யாகு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து உரையாடியிருக்கிறார். மோடியை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் நெதன்யாகு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் விவகாரத்தில் சமீப காலமாக இந்தியா தொடர்ந்து நெருக்கமாக இருந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. "பாலஸ்தீன விஷயத்தில் இஸ்ரேலின் நடவடிக்கை சரி கிடையாது. சர்வதேச போர் விதிகளை மீறி ஆயிரக்கணக்கானவர்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது. தனி பாலஸ்தீனம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வந்தது. ஆனால், இப்போது பாலஸ்தீனத்திற்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருக்கிறது" என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Netanyahu narendra modi Israel

இந்த நிலையில்தான் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு நலம் விசாரித்திருக்கிறார். இந்த தொலைபேசி உரையாடல் குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "பிரதமர் நரேந்திர மோடிக்கு, இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இந்தியா-இஸ்ரேல் ராஜதந்திர உறவு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர், மேலும் இரு நாட்டு நன்மைக்காக இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் உறுதி ஏற்று இருக்கின்றனர்.

பயங்கரவாதத்தை இரு தலைவர்களும் கடுமையாகக் கண்டித்தனர். மேலும், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகள் மீதான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை மீண்டும் வலியுறுத்தினர். மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். காசா அமைதித் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவது உட்பட, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை நோக்கிய முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, இரு தலைவர்களும் மிக விரைவில் சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இஸ்ரேல் அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் இந்தியா வருவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. இருப்பினும் செப்.8ம் தேதி அவர் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+