ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் (POK) இந்தியாவைச் சேர்ந்தது என்றும், அந்த பகுதி மீது ஒரு நாள் இந்தியா அதிகார வரம்பை செலுத்தப்போவது உறுதி என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அதிரடியாக தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சர் சுப்ரமண்யன் ஜெய்சங்கர் டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:

PoKஇல் நமது நிலைப்பாடு எப்போதுமே ஒரே மாதிரி இருந்து வருகிறது, எப்போதும் மிகவும் தெளிவாக இருக்கிறது. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகும், அதன் மீது நமக்கு முழு அதிகார வரம்பு ஒருநாள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமாகத்தான் இருக்குமே தவிர நமது காஷ்மீர் பற்றியாக இருக்காது.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்த நாடு முதலில் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது குறித்து பாகிஸ்தான் நல்ல நல்ல வார்த்தைகளை மட்டுமே நமக்கு பரிசாக அளிக்கிறது, ஆனால் பயங்கரவாத நெட்வொர்க்கை அகற்றுவதில் எந்த செயல்பாடும் இல்லை.
இந்தியாவின் குரல் இப்போது உலக அரங்கில் அதிகம் கேட்கப்படுகிறது, அது ஜி 20 அல்லது காலநிலை மாநாடு என எதுவாக இருந்தாலும் சரிதான். அரசு இந்த பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களில், அண்டை நாடுகளுடான உறவை மேம்படுத்தியுள்ளது.
External Affairs Minister S Jaishankar briefing the media on first 100 days of his ministry: We, like any other country, would want to put out our narrative, our specific interest and in the last 100 days some of that has gone to the message of change... (1/2) pic.twitter.com/p3eGZGwpAs
— ANI (@ANI) September 17, 2019
பிரதமர் மோடி, மாலத்தீவு, இலங்கை, பூட்டான் போன்ற நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சினை, 370 வது பிரிவை நீக்குவது போன்ற விவகாரங்கள், இந்தியா தரப்பிலிருந்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications