ஜேஎன்யூ தாக்குதல்.. கொல்கத்தாவில் போராடிய மாணவர்கள்.. போலீஸ் திடீர் தடியடி.. பலர் காயம்!
Recommended Video
டெல்லி: ஜேஎன்யூ தாக்குதலுக்கு எதிராக கொல்கத்தாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினார்கள்.
இந்தியாவின் முக்கியமான பல்கலைக்கழகமாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கு நேற்று முதல்நாள் மாணவர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள்.
இந்த நிலையில் கொல்கத்தாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினார்கள். கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள்தான் அங்கு போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறார்கள். அவர்கள் இரண்டு நாட்களாக போராடி வருகிறார்கள்.
அவர்கள் நேற்று போராடும் போது போலீசார் அவர்களை கலைந்து போக சொல்லி உத்தரவிட்டனர். ஆனால் மாணவர்கள் கலைந்து செல்லவில்லை. அங்கு மாணவர்கள் கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகம் ஆகிக்கொண்டே சென்றது.
ஈரானுடன் சண்டை.. முக்கியமான நேரத்தில் டிரம்பிற்கு போன் செய்த மோடி.. திடீர் பேச்சு.. என்ன பின்னணி?
இதனால் அங்கு போடப்பட்டு இருந்த தடுப்பு சுவரை மீறி மாணவர்கள் உள்ளே சென்றனர். காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த தடியடியில் மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர். மாணவிகளும் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்தனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.