ஜேஎன்யு வன்முறையின்போது போலீஸாரிடம் ஆயுதமோ லத்தியோ இல்லை.. நற்சான்றிதழ் வழங்கிய போலீஸ் குழு
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட காவல் துறை அதிகாரிகள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு போலீஸாரின் அலட்சியம் காரணம் இல்லை என நற்சான்றிதழ் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 5-ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு புகுந்தனர். அவர்கள் 36 மாணவர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் ஆகியோரை கட்டை மற்றும் இரும்பு ராடுகளால் கடுமையாக தாக்கினர்.

இதில் அவர்கள் காயமடைந்தனர். இதுதொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதுதொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
வன்முறை சம்பவம் நடந்த போது போலீஸார் உள்ளே சென்று தடுக்காமல் ஏன் வெளியே நின்றுக் கொண்டிருந்தார்கள்? இந்த சம்பவத்திற்கு போலீஸாரின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டக்காரர்களை பிடிக்க உள்ளே புகுந்த போலீஸார் அங்கு நூலகத்தில் இருந்த மாணவர்களை கடுமையாக தாக்கினர். அவ்வாறிருக்கையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு உள்ளே மட்டும் போகாதது முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க இணை ஆணையர் ஷாலினி சிங், தலைமையில் போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக், 4 இன்ஸ்பெக்டர்கள், இரு உதவி ஆணையர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் நடத்திய விசாரணையில் பல்கலைக்கழக 100 மீட்டருக்குள்பட்ட இடத்தில் தர்னா போராட்டம் நடத்தக் கூடாது என்பதற்காக உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீஸார் பாதுகாப்புக்கு சென்றனர்.

அவர்களிடம் ஆயுதங்களோ லத்தியோ இல்லை. எனவே இந்த வன்முறைச் சம்பவத்தில் போலீஸார் மீது எந்த தவறும் இல்லை என காவல்துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு விசாரணை குழுவே நற்சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications