ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் பறந்த நபர்.. துரத்தி பிடித்த காவல்துறை! அடுத்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு மட்டும் சாலை விபத்தில் 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 426 பேர் உயிரிழப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், காவல்துறை அதிகாரி ஒருவர், சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருக்கும் நபரை நிறுத்தி அவருக்கு ஹெல்மெட் போட்டு விடுகிறார்.
உரிய பாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்வது விபத்துக்களை குறைக்கும் என ஆய்வுகள் பல தெரிவித்துள்ள நிலையில், காவல்துறை அதிகாரியின் இந்த செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

விபத்துக்கள்
இந்தியாவில் கடந்த 2021ல் 4.03 லட்சம் சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துக்களில் 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 426 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்பு ஒரு மணி நேரத்திற்கு 18ஆக இருக்கிறது. இவ்வாறு ஏற்பட்ட விபத்துகளில் 3.71 லட்சம் பேர் படுகாயமடைந்துள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்திருக்கிறது. விபத்துக்கு அதிவேகமும், பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றாததும்தான் முக்கிய காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஹெல்மெட்
இந்நிலையில் காவல்துறை அதிகாரி ஒருவர், பைக்கில் சென்றுகொண்டிருந்த ஒவரை தடுத்து நிறுத்தி அவருக்கு ஹெல்மெட்டை அணிவித்துள்ளார். ஜெய்க்கி யாதவ் எனும் டிவிட்டர் பயனாளி பகிர்ந்த வீடியோவில் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் காவல்துறை அதிகாரி ஹெல்மெட்டை அணிவித்தது மட்டுமல்லாமல், போக்குவரத்து விதிகள் குறித்தும், ஹெல்மெட்டுடன் பயணிக்க வேண்டிய அவசியம் குறித்தும் அந்த பயணிக்கு கைகூப்பி எடுத்துரைத்துள்ளார்.

வேண்டுகோள்
மேலும், அடுத்த முறை ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் ஐந்து மடங்காக விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. காவல்துறையின் அணுகுமுறையை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இந்த சம்பவம் நடந்த இடம் எந்த மாநிலம் என்று சரியாக தெரியவில்லை. இருப்பினும் ஒவ்வொரு காவலர்களும் இதுபோன்ற அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என இந்த வீடியோவுக்கு பயனர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான மாநிலங்கள்
இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்துள்ளன. NCRB புள்ளிவிவரங்களின்படி, 2020 (0.45), 2019 (0.52), 2021 (0.53) என உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்று இருந்த போதுகூட இந்த விபத்து உயிரிழப்புகள் கணிசமாக குறைந்தபாடில்லை. பொதுவாக சாலை விபத்துக்கள் காயங்களை மட்டுமே ஏற்படுத்துகின்றன. ஆனால் மிசோரம், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்படும் விபத்துக்கள் மரணங்களை ஏற்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications