3-வது முறையாக விவசாயிகளின் 'டெல்லி சலோ' போராட்டம்.. ஹரியானா எல்லையில் மீண்டும் கண்ணீர் புகை வீச்சு!
டெல்லி: வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டனர். போலீசாரின் தடையை மீறி முன்னேற முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மேலும் ஹரியானாவின் பல பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் செல்ல முடியாத வகையில் அம்மாநில போலீசாரும் பாதுகாப்பு படையினரும் தடுப்பு அரண்களை அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் டிசம்பர் 6, டிசம்பர் 8 ஆகிய தேதிகளில் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் இருந்து விவசாயிகள், டெல்லி நோக்கி புறப்பட்டு போராட்டம் நடத்த முயற்சித்தனர். ஆனால் ஹரியானா மாநில போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர். அப்போது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் விவசாயிகளை முன்னேற விடாமல் போலீஸ் தரப்பு தடுத்தது. இதனால் இரு முறை போராட்டங்களை தற்காலிகமாக விவசாயிகள் ஒத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று 3-வது முறையாக ஹரியானாவின் ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி செல்ல விவசாயிகள் முயன்றனர். இன்றும் போலீசாரும் பாதுகாப்பு தரப்பினரும் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்; இந்த தடையை மீறி முன்னேற முயன்ற போது விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
#WATCH | Farmers' 'Dilli Chalo' march | Visuals from the Shambhu border where Police use tear gas and water cannon to disperse farmers pic.twitter.com/4d87fElxLZ
— ANI (@ANI) December 14, 2024
இதனிடையே ஹரியானா மாநிலத்தின் பல பகுதிகளில் மொபைல் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது; அதேபோல பல்க் எஸ்.எம்.எஸ். வசதியும் தடை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையாமல் தடுக்க இந்த நடவடிக்கைகளை ஹரியானா மாநில அரசு மேற்கொண்டுள்ளது. ஹரியானாவில் அடுத்த 3 நாட்களுக்கு இந்த இணைய சேவை தடை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications