இப்படியே இருக்க முடியாது.. என் நண்பனை விட்ருங்க.. ஏதாவது தீர்வு காணுங்க.. பூஜா பேடி குரல்
உமர் அப்துல்லாவை விடுவிக்க வேண்டும் என்று பூஜா பேடி ட்வீட்போட்டுள்ளார்
டெல்லி: உமர் அப்துல்லாவுக்காக அவரது தோழி ஒருவர் குரல் கொடுத்துள்ளார். வீட்டுக் காவலிலிலிருந்து உமரை விடுவிக்க வேண்டும் என்று தனது மனசில் இருப்பதை அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவை மத்திய அரசு விரைவில் விடுவிக்க வேண்டும். விடுவிக்கும் என நம்புகிறேன் என்று உமர் அப்துல்லாவின் தோழியும், மாடலும், நடிகையுமான பூஜா பேடி கூறியுள்ளார்.
பூஜா பேடியும், உமர் அப்துல்லாவும் ஒன்றாகப் படித்தவர்கள் ஆவர். அந்த வரிசையில் தனது நண்பனுக்காக குரல்கொடுத்துள்ளார் பூஜா பேடி. இவர் நடிகர் கபீர் பேடியின் மகள் ஆவார்.

தலைவர்கள்
370வது சட்டப் பிரிவு நீக்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதல் உமர் அப்துல்லா வீட்டுக் காவலில் இருக்கிறார். அவர் மட்டுமல்ல, அவரது அப்பா பரூக் அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோரும் கூட வீட்டுக் காவலில்தான் உள்ளனர். இவர்களை விடுவிப்பது குறித்து மத்திய அரசு எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை.

அமித்ஷா
இந்த நிலையில்தான் பூஜா பேடி குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, சில பத்திரிகையாளர்களை டேக் செய்துள்ளார். அதில் உமர் விடுதலையை அவர் வலியுறுத்தியுள்ளார்.

படித்தவர்
அவர் கூறுகையில், " உமர் அப்துல்லா கைதாகி ஒரு மாதமாகி விட்டது. அவர் என்னுடன் படித்தவர். எனது குடும்ப நண்பர். 3 தலைமுறைகளாக இந்த நட்பு தொடர்கிறது. அவர் விடுதலை செய்யப்பட வேண்டும்.
|
வலியுறுத்தல்
அரசு அவரை விடுவிக்கும் என நம்புகிறேன். இந்த கைது நீடித்துக் கொண்டே இருக்க முடியாது. ஏதாவது தீர்வு கண்டாக வேண்டும் என்று பூஜா பேடி வலியுறுத்தியுள்ளார். பூஜா பேடி மட்டுமல்ல மேலும் பலரும் கூட தொடர்ந்து இவர்களின் விடுதலையை வலியுறுத்திக் கொண்டுதான் உள்ளனர்.

தெளிவு
விடுதலைதான் எப்போது என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் அளவுக்கு காஷ்மீரில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என்பது மட்டும் தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications