தொல்லியல் பட்டயப்படிப்பு தகுதி.. செம்மொழிகளின் வரிசையில் தமிழுக்கு முதலிடம்.. எதிர்ப்பால் மாற்றம்
டெல்லி: தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்த்து திருத்தம் செய்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டதிற்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய தொல்லியல்துறை சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் இயங்குகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்பிற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.

கல்வி தகுதி
இந்த படிப்பிற்கு இந்திய வரலாறு, தொல்லியல் துறை, மானுடவியல், தொல்லியல் மொழிகளான சமஸ்கிருதம், பாலி, அரபு மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. மொத்தம் உள்ள 15 இடங்களுக்கு நவம்பர் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

ஹைகோர்டில் வழக்கு
ஆனால் இந்த படிப்பிற்கான கல்வித் தகுதியில் செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது.

தமிழையும் சேர்க்க கோரிக்கை
இதன்படி மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் படிப்புகளுக்கான அறிவிப்ப ரத்து செய்யவும், தமிழையும் இணைத்து முறையாக புதிய அறிவிப்பு வெளியிடக்கோரியும், அதுவரை சேர்க்கை நடைமுறையை நிறுத்தி வைக்கக் கோரியும் வழக்கும் தொடரப்பட்டது.இதை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், இன்று மனுவதாக தாக்கல் செய்தால் நாளையே (இன்று) விசாரிக்கப்படும் என்றார்கள்.

தமிழுக்கு முதலிடம்
இந்த சூழலில் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்த்து திருத்தம் செய்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செம்மொழிகளின் வரிசையில் தமிழுக்கு இந்த பட்டியலில் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா, பாலி, பராகிரித், அரபி அல்லது பார்ஸி ஆகிய மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் தொல்லியல்துறை பட்டயப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications