நாளை மறுநாள் முதல் காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை.. போஸ்ட்பெயிட் பயனாளர்களுக்கு மட்டும்
டெல்லி: காஷ்மீரில் போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்பு சந்தாதாரர்கள், வரும், திங்கள்கிழமை முதல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அவர்களுக்கான தொலைதொடர்பு கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது.
மொபைல் தொலைபேசி இணைப்புகள் எந்த சேவை வழங்குநராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அனைத்து போஸ்ட்பெய்ட் மொபைல் போன் இணைப்புகளும் அக்டோபர் 14 மதியம் முதல் மீண்டும் தொடங்கும். காஷ்மீரின் அனைத்து 10 மாவட்டங்களிலும் இது அமலுக்கு வரும், என்று ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதை தடுக்க, இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கடந்த மாதம், அரசு, லேண்ட்லைன் இணைப்புகளை மறுபடியும் இயங்க அனுமதித்தது. இருப்பினும், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் சேவைகளுக்கு அதுவும் வீடுகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்பட்டது.
அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்த கட்டுப்பாடுகள் குறித்து கவலை தெரிவித்தன. கடந்த மாதம் பெல்ஜியத்தில் நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "காஷ்மீர் முழுவதையும் பாதிக்காமல் போராட்டம் நடத்துவோருக்கு இடையேயான தகவல்தொடர்புகளை மட்டும் நிறுத்த முடியாது. பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் எஜமானர்களுக்கும் இடையிலான தொடர்புகளை நான் எவ்வாறு துண்டிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை இந்தியா ரத்து செய்தது முதல், அங்கு தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications