வறுமை ஒழிப்பு… காங்கிரசுக்கு எப்பொழுதும் ஆயுதமா?... அருண் ஜெட்லி விளாசல்
Recommended Video

டெல்லி: வறுமை ஒழிப்பை எப்பொழுதும் காங்கிரஸ் ஆயுதமாக பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார்.
ஏழை குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி குறித்து அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், நாட்டில் 20% ஏழைக் குடும்பங்கள் ஏற்கனவே மோடி அரசால் பல்வேறு திட்டங்களின் கீழ் 1.06 லட்சம் ரூபாய் பெற்று வருவதாக கூறினார்.
ஆனால், ஆண்டுக்கு ரூ. 72,000 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், வறுமை ஒழிப்பை எப்பொழுதும் காங்கிரஸ் ஆயுதமாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியை போன்று இந்திய மக்களை எவரும் ஏமாற்றியது கிடையாது என்றும், தேர்தலுக்கு முன்னர், ஏழைகளுக்கு நேரடியாக நன்மை பயக்கும் ஆதார் மசோதாவை பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்த்தது. அவர்களது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் எதிர்த்தனர். இப்பொழுது பணம் வங்கிகளில் நேரடியாக வழங்கப்படும் என்று அவர்களே (காங்கிரஸ்) கூறி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
1971 ம் ஆண்டு 'வறுமையை ஒழிப்போம்' என்ற முழக்கத்தோடு இந்திரா காந்தி தேர்தலை எதிர்கொண்டதாகவும், ஆனால் அதன்பின் வறுமையை ஒழிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அருண்ஜெட்லி கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications