ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்- காஷ்மீர், டெல்லி.. அதிர்ந்தன வட இந்திய மாநிலங்கள்!
டெல்லி: ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.8 அலகுகளாக பதிவாகி இருந்தது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நாட்டின் வட மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்டவையும் நில அதிர்வுகளை எதிர்கொண்டன.
ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லை பகுதியில் இன்று பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 5.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தன. இந்திய நேரப்படி பகல் 12.17 மணிக்கு இந்த நிலநடுக்கம் தாக்கியது. பூமிக்கு அடியில் 80 கீமீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வட இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் மிதமான நில அதிர்வுகள் உணரப்பட்டது. இதேபோல டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதனையடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். தற்போது நில அதிர்வுகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
முன்னதாக கடந்த புதன்கிழமையன்றும் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியை மையாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இது ரிக்டரில் 5.9 அலகுகளாகப் பதிவானது. டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்கள் அப்போது நில அதிர்வை உணர்ந்தன.












Click it and Unblock the Notifications