Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛இளைஞர்களின் உத்வேகமே’’.. பிரக்ஞானந்தாவை நேரில் பாராட்டிய கவுதம் அதானி! என்ன சொன்னார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான கவுதம் அதானி தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரரான பிரக்ஞானந்தாவை இன்று நேரில் சந்தித்து பாராட்டினார்.

தமிழகத்தை சேர்ந்தவர் பிரக்ஞானந்தா. உலகில் முன்னணி செஸ் வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார். உலகம் முழுவதும் உள்ள செஸ் சாம்பியன்களுக்கு சிம்ம சொப்பனமாக பிரக்ஞானந்தா விளங்கி வருகிறது. தான் பங்கேற்கும் போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வரும் பிரக்ஞானந்தாவுக்கு வயது வெறும் 18 தான்.

 Praggnanandhaa success is an inspiration to countless young Indians, says Gautham Adani after met him

இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான இவர் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை செஸ் தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் அவர் உலக சாம்பியனான மேகன்ஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய நிலையில் கடைசியில் பிரக்ஞானந்தா வெற்றியை இழந்து மயிரிழையில் உலக சாம்பியன் பட்டத்தை மிஸ் செய்தார்.

இந்த உலக கோப்பை செஸ் தொடரின் இறுதி போட்டியில் தோற்றாலும் கூட பிரக்ஞானந்தா உலகின் சிறந்த ஜூனியர் வீரர்களாக உள்ளதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) அறிவித்துள்ளது. இது பிரக்ஞானந்தாவின் சிறப்பான விளையாட்டு திறனுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்பட்டு வருகிறது.

 Praggnanandhaa success is an inspiration to countless young Indians, says Gautham Adani after met him

இந்நிலையில் தான் பிரக்ஞானந்தாவை இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான கவுதம் அதானி இன்று சந்தித்து பாராட்டியுள்ளார். இருவரும் சந்தித்த போட்டோவை கவுதம் அதானி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு அதில் பிரக்ஞானந்தா குறித்து பெருமையாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கவுதம் அதானி கூறியுள்ளதாவது:

"பிரக்ஞானந்தா செஸ் உலகில் தொடர்ந்து பதக்கங்களை வென்று இந்தியாவை பெருமைப்படுத்தி வருகிறார். அவரை ஆதரிப்பதை பாக்கியமாக கருதுகிறேன். அவருடைய வெற்றி என்பது இந்தியாவில் எண்ண முடியாத இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. பிரக்ஞானந்தா என்பவர் இந்தியாவால் என்ன செய்ய முடியும், என்னவாக இருக்க முடியும் என்பதை குறிக்கும் வகையில் இருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தாவின் தந்தை பெயர் ரமேஷ் பாபு. தாய் பெயர் நாகலட்சுமி. இவரது சகோதரி பெயர் வைஷாலி. இவரும் செஸ் வீராங்கனை தான். பிரக்ஞானந்தா தனது 7வது வயதில் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்று ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டெஸ் எச்செக்ஸ் (FIDE) மாஸ்டர் பட்டம் பெற்றார். 10 வயதில், அவர் செஸ் இளைய சர்வதேச மாஸ்டர் என்ற பட்டத்தையும் பெற்றார். பிரக்ஞானந்தா தனது 16ஆவது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார். இவருக்கு மத்திய அரசு சார்பில் அர்ஜூனா விருதும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+