கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி.. ஆதாரம் இருக்கு.. பிரகாஷ் ஜவடேகர் பகீர் பேட்டி
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு தீவிரவாதி என்றும், அதற்கு ஆதாரம் இருக்கிறது என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டசபைக்கு வரும் 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் நடுவே கடும் போட்டி நிலவுகிறது.

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவினர் தன்னைத் தீவிரவாதி என்று அழைத்து வருவதாகவும் ஆனால் நான் டெல்லி மாநிலத்துக்கு முதல்வர் என்றும் கூறினார். பல மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்திருப்பார்கள், சிலர் பாஜகவுக்கு வாக்களித்திருப்பார்கள் ஆனால் நான் கட்சி பேதமின்றி அனைத்து மக்களுக்கும் நல்லது செய்து வருகிறேன். நீங்கள் என்னை தீவிரவாதி என்று நினைத்தால் தாமரை சின்னத்தில் ஓட்டுப்போடுங்கள். நான் உங்களின் மகன் என்று நினைத்தால் ஆம் ஆத்மி சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று பிரச்சாரம் செய்திருந்தார்.
இந்த நிலையில்தான் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரவாதி தான் என்றும், அதற்கு நிறைய ஆதாரம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை அடிக்கடி ஒரு போராட்டக்காரர் என்று கூறிக் கொள்வதாகவும், போராட்டக்காரர்களுக்கும், தீவிரவாதிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் அப்பாவி முகத்தில் ஒளிந்து கொண்டு இருப்பதாகவும் பகீர் குற்றச் சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.
முன்னதாக பாஜக எம்பி பர்வேஷ் வர்மா, கெஜ்ரிவாலை தீவிரவாதி என்று அழைத்திருந்தார். இது தொடர்பாக ஆம் ஆத்மி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் பர்வேஷ் வர்மாவுக்கு 96 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications