ஆர்எஸ்எஸ் முகாமில் முதல் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்.. மதசார்பின்மை குறித்து பேச்சில் சாதுர்யம்
டெல்லி: ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாமுக்கே சென்று சகிப்புத்தன்மை, மதசார்பின்மை, பன்முகத்தன்மை குறித்து பிரணாப் முகர்ஜி பேசியது பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது.
Recommended Video
ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியை கட்சி பேதமின்றி கொண்டாடினார்கள் என்றால் அதற்கு காரணம் அவருடைய குணாதிசயங்கள்தான். இந்த குணங்கள்தான் ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்த பிறகும் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம் நிறைவு விழாவுக்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அவரும் கலந்து கொண்டார். ஆர் எஸ் எஸ் விழாவில் கலந்து கொண்ட முதல் முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றவர். இவர் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.

பெருமை
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. அந்த பன்முகத்தன்மைக்கு அளிக்கும் மரியாதை, சகிப்புத் தன்மை ஆகியவற்றின் மூலமே நாம் நம்முடைய வலிமையை பெறுகிறோம். அதை நாம் பெருமையுடன் கொண்டாடி வருகிறோம்.

இந்தியா
பல்வேறு இனம், மொழி மற்றும் மதங்களை பின்பற்றும் மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். எனவே மக்களிடையே சகிப்புத்தன்மை மிகவும் அவசியமானதாகும். அது இல்லாவிட்டால் சர்வதேச அளவில் இந்தியாவில் இருந்து வரும் தனித்துவ அடையாளம் நீர்த்து போகும்.

சித்தாந்த ரீதியில்
மத ரீதியிலோ அல்லது சித்தாந்த ரீதியிலோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும் சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே வன்முறைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும் என பிரணாப் தெரிவித்திருந்தார்.

மதசார்பின்மை
அன்றைய காலகட்டத்தில் பாஜக, ஆர் எஸ் எஸ் ஆகிய கட்சிகளுக்கு சகிப்புத்தன்மை இல்லை என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்களின் நிகழ்ச்சிக்கே போய் மதசார்பின்மை, சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை ஆகியவை குறித்து பிரணாப் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவரது பேச்சை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications