ஆர்எஸ்எஸ் முகாமில் முதல் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்.. மதசார்பின்மை குறித்து பேச்சில் சாதுர்யம்
டெல்லி: ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாமுக்கே சென்று சகிப்புத்தன்மை, மதசார்பின்மை, பன்முகத்தன்மை குறித்து பிரணாப் முகர்ஜி பேசியது பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது.
Recommended Video
ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியை கட்சி பேதமின்றி கொண்டாடினார்கள் என்றால் அதற்கு காரணம் அவருடைய குணாதிசயங்கள்தான். இந்த குணங்கள்தான் ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்த பிறகும் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம் நிறைவு விழாவுக்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அவரும் கலந்து கொண்டார். ஆர் எஸ் எஸ் விழாவில் கலந்து கொண்ட முதல் முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றவர். இவர் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.

பெருமை
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. அந்த பன்முகத்தன்மைக்கு அளிக்கும் மரியாதை, சகிப்புத் தன்மை ஆகியவற்றின் மூலமே நாம் நம்முடைய வலிமையை பெறுகிறோம். அதை நாம் பெருமையுடன் கொண்டாடி வருகிறோம்.

இந்தியா
பல்வேறு இனம், மொழி மற்றும் மதங்களை பின்பற்றும் மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். எனவே மக்களிடையே சகிப்புத்தன்மை மிகவும் அவசியமானதாகும். அது இல்லாவிட்டால் சர்வதேச அளவில் இந்தியாவில் இருந்து வரும் தனித்துவ அடையாளம் நீர்த்து போகும்.

சித்தாந்த ரீதியில்
மத ரீதியிலோ அல்லது சித்தாந்த ரீதியிலோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும் சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே வன்முறைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும் என பிரணாப் தெரிவித்திருந்தார்.

மதசார்பின்மை
அன்றைய காலகட்டத்தில் பாஜக, ஆர் எஸ் எஸ் ஆகிய கட்சிகளுக்கு சகிப்புத்தன்மை இல்லை என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்களின் நிகழ்ச்சிக்கே போய் மதசார்பின்மை, சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை ஆகியவை குறித்து பிரணாப் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவரது பேச்சை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications