பிரசாந்த் கிஷோர் சாபமிடுகிறாரா? காங்கிரஸில் பெருந்தலைகள் நிறைய இருக்கு..தானே மீண்டு விடுமாம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் பெரிய தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர்; அந்த கட்சி தானாகவே மீண்டு எழும் என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் மீதான நம்பிக்கையில் இப்படி பிரசாந்த் கிஷோர் இப்படி சொன்னாரா? அல்லது காங்கிரஸ் மீதான கடுப்பில் இப்படி சாபமிடுவது போல் அவர் கூறினாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
2024 லோக்சபா தேர்தல், அதற்கு முந்தைய மாநில சட்டசபை தேர்தல்களை இலக்கு வைத்து காங்கிரஸ் மேலிடம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் இப்போதுதான் கட்சி மறுசீரமைப்புகளில் முழு கவனம் செலுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுடியாக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு முன்னதாக காங்கிரஸில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை கட்டமைப்பு மாற்றங்கள் தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றன. பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஆலோசனையின்படியே சில குழுக்களையும் காங்கிரஸ் மேலிடம் அமைத்தது.

பிரசாந்த் கிஷோர் மறுப்பு
ஆனால் திடீரென காங்கிரஸில் சேருவதற்கு பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார். பிரசாந்த் கிஷோரைப் பொறுத்தவரை லோக்சபா தேர்தல் வேறு; மாநில சட்டசபை தேர்தல்கள் வேறு என்பது கருத்து. காங்கிரஸ் கட்சியோ இரண்டும் ஒன்றுதான் என கருதுகிறது. இதுதான் இரு தரப்புக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டுக்கு அடிப்படை எனவும் கூறப்பாடுகிறது.

பல தலைவர்கள் இருக்காங்க..
இந்நிலையில் ஆஜ்தக் தொலைக்காட்சிக்கு பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் விவகாரம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது: காங்கிரஸின் எதிர்காலம் தொடர்பான பல திட்டங்களில் காங்கிரஸ் மேலிடத்துக்கும் எமக்கும் புரிதல்கள் இருந்தன. ஆனால் காங்கிரஸில் நிறைய தலைவர்கள் உள்ளனர். அவர்களால் அதனை செய்ய முடியும். அவர்களுக்கு நான் தேவைப்படவில்லை. காங்கிரஸில் இணைய சொன்னார்கள்.. நான் இணைய மறுத்துவிட்டேன்.

அந்த சந்தேகம்
காங்கிரஸ் கட்சிக்கு என்ன சொல்ல வேண்டும் என நினைத்தேனோ அதை சொல்லிவிட்டேன். 2014-ம் ஆண்டு தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி இப்போதுதான் கட்சி கட்டமைப்பு மாற்றம் குறித்து விவாதிக்கிறது. கட்சியின் முதன்மையான குழுவில் என்னை இடம்பெறச் செய்ய அவர்கள் விரும்பினர். அது எனக்கு சில சந்தேகங்களை எழுப்பியது.

யார் தலைவர்?
காங்கிரஸ் தலைமை தொடர்பாக எங்களுடைய பார்முலா ஒன்று அக்கட்சியிடம் தரப்பட்டது. ஆனால் அதில் ராகுல் காந்திதான் தலைவராக வேண்டும்; பிரியங்கா காந்திதான் தலைவராக வேண்டும் என்றெல்லாம் எதுவும் சொல்லப்படவில்லை. காங்கிரஸ் மேலிடத்தில் கட்சி தலைமை தொடர்பாக தெரிவித்த பார்முலாவை பகிரங்கப்படுத்தவும் முடியாது. காங்கிரஸில் ராகுல் காந்தி என்ன பதவி வகிக்க வேண்டும் என்பதை நான் எப்படி தீர்மானிக்க முடியும்? பாஜகவினரின் கடுமையான தாக்குதல்களால் மோசமடைந்திருக்கும் ராகுல் காந்தியின் இமேஜ் மீள கட்டமைக்கப்படக் கூடிய ஒன்றுதான். 2002-ம் ஆண்டு மோடியின் இமேஜ் எப்படி இருந்தது.. இப்போது எப்படி தலைகீழாக மாறி இருக்கிறது? இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.
-
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications