திமுகவின் அதே பாணி.. டெல்லியில் ஜெயிக்க உதவுங்க.. கெஜ்ரிவாலுக்கும் உதவும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக்
டெல்லி: டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணியை ஆம்ஆத்மி தொடங்கி உள்ள நிலையில் டெல்லியில் வெற்றி பெற தேர்தல் வியூக பிரசாந்த் கிஷோர் உருவாக்கிய ஐ-பேக் நிறுவனத்தை அந்த கட்சி நாடியுள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தார். அதன்பிறகு டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழலில் அமலாக்கத்துறை கைதுக்கு பிறகு ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அந்த கட்சியின் அதிஷி முதல்வராக உள்ளார்.

விரைவில் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது 2025 பிப்ரவரி மாதம் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பு 2025ம் ஆண்டின் ஜனவரி மாதம் வெளியாக வாய்ப்புள்ளது. இதனால் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பணியை ஆம்ஆத்மி கட்சி தொடங்கி விட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்து வருகிறார். அதேபோல் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் கூட டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தனித்து தான் போட்டி என்று அவர் அறிவித்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார். டெல்லியில் கடந்த 2015 முதல் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி தான் நடக்கிறது.
2015, 2020 சட்டசபை தேர்தலில் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி வென்ற நிலையில் இப்போது 3வது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் ஆம்ஆத்மி கட்சி உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டு தொடர் ஆட்சியால் ஆம்ஆத்மி கட்சிக்கு எதிர்ப்பு அலை என்பது உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆம்ஆத்மி கட்சி திமுகவின் பாணியில் தேர்தல் வியூக நிறுவனமான ஐ-பேக்கை நாடியுள்ளது.
இந்த ஐ-பேக் நிறுவனம் தான் தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெல்லும் வகையில் வியூகம் வகுத்து கொடுத்தது. இந்த நிறுவனத்தை பிரசார வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தான் தொடங்கினார். தற்போது அவர் பீகாரில் ‛ஜன் சுராஜ்' என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளதால் இந்த நிறுவனத்தில் இருந்து தூரம் சென்றுள்ளார். இருப்பினும் அவரது குழுவை சேர்ந்தவர்கள் தான் தற்போது ஐ-பேக்கை நடத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் டெல்லியில் பிரசார வியூகங்களை வகுத்து கொடுக்கும்படி ஆம்ஆத்மி கட்சி, ஐ-பேக் நிறுவனத்தை நாடியுள்ளது. இதுதொடர்பாக ஐ-பேக் சார்பில், வரும் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியுடன் ஐ-பேக் நிறுவனம் பார்ட்னராக இணைந்துள்ளது. கட்சியின் பிரசார வியூகங்களை வகுத்து கொடுத்து மீண்டும் ஆட்சியில் அமரும் வகையில் அந்த கட்சி எங்களுடன் இணைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு டெல்லியின் களநிலவரம் மற்றும் டிஜிட்டல் பிரசாரங்களை முன்னெடுக்கும் ஐ-பேக் குழுவினர் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளனர். இந்த டீமில் 40 முதல் 50 பேர் இருப்பார்கள். அதன்பிறகு மேலும் கூடுதலாக ஐ-பேக் குழுவினர் செல்வார்கள். மொத்தம் 70 முதல் 80 நாட்கள் வரை இந்த குழுவினர் ஆம்ஆத்மி கட்சிக்காக டெல்லியில் பணியாற்ற உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஐ-பேக் நிறுவனத்துடன் ஆம்ஆத்மி கட்சி கூட்டு சேர்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2020 சட்டசபை தேர்தலின்போது ஆம்ஆத்மி கட்சிக்கு ஐ-பேக் நிறுவனம் தான் பிரசார வியூகங்களை வகுத்து கொடுத்தது. மொத்தம் 70 தொகுதிகள் உள்ள டெல்லி சட்டசபையில் அந்த தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 8 இடங்களை கைப்பற்றியது. இது முந்தைய 2015 தேர்தலை ஒப்பிடும்போது ஆம்ஆத்மி கட்சி 2020ல் 5 இடங்களை இழந்தாலும் கூட தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. இதனால் தான் மீண்டும் ஐ-பேக் நிறுவனம் மீண்டும் ஆம்ஆத்மி கட்சிக்கு வியூகங்களை வகுத்து கொடுக்க உள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications