இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் உட்பட.. சர்வ மத பிரார்த்தனையோடு நடந்த நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியபோது, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், பவுத்தம், சமணம் உள்ளிட்ட அனைத்து மத முறைப்படி பிரார்த்தனைகள் நடைபெற்றது கவனம் ஈர்த்தது.

Recommended Video

    #BREAKING புதிய நாடாளுமன்றம்…அடிக்கல் நாட்டினார் பிரதமர்..!

    ஏற்கனவே உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லை என்பதால் புதிதாக அதே இடத்திற்கு அருகே நாடாளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    Prayers performed by various religious leaders at new Parliament building

    டாடா நிறுவனத்துக்கு இந்த கட்டுமான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும், இரண்டு வருடங்களில் நாடாளுமன்றக் கட்டிடம் கட்டும் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே நேரம், இந்த நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கட்டிடம் கட்டுவதற்கு தடை விதித்துள்ளது. அதே நேரம் பூமி பூஜை செய்து கொள்ள அனுமதி வழங்கியிருந்தது.

    இதன்படி, இன்று மதியம் 1.30 மணியளவில் நடைபெற்ற பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம், பௌத்தம், சமணம் உள்ளிட்ட பல மதத்தை சேர்ந்த ஆன்மீகத் தலைவர்கள் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். அவர்கள் தங்களது மத முறைப்படி வழிபாடுகள் செய்தனர். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. நாட்டின் இறையாண்மை நாடாளுமன்ற கட்டிடம் என்பதால் அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை செய்து, இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று உள்ளது கவனம் ஈர்ப்பதாக அமைந்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+