இனி கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி.. செய்ய வேண்டியது என்ன?
டெல்லி: இனி கர்ப்பிணிகளும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் கோவின் செயலி மூலம் பதிவு செய்தோ அல்லது அருகில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு நேராக சென்றோ பெறலாம்.
கொரோனா தடுப்பூசியை இதுவரை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு போடப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கர்ப்பிணிகளை தாக்கும் கொரோனா வைரஸால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக தற்போது ஆய்வுகள் கண்டறிந்தன.

இந்த நிலையில் அவர்களும் தடுப்பூசி போட்டு கொள்வது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவானது கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போடலாம் என பரிந்துரைத்தது.
இதையடுத்து இந்த தகவல் இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தெரிவிக்கப்பட்டன. அதன்படி கர்ப்பிணிகள் நேரடியாகவோ அல்லது கோவின் செயலி மூலம் பதிவு செய்தோ தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் தாயும் சேயும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்படுவர்.
கர்ப்பம் அடைந்த நாளிலிருந்து எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்த பாதிப்பையும் கொடுக்காது. தடுப்பூசியால் தாய்க்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் குழந்தைக்கும் அது செல்லும்.
தடுப்பூசி போட்ட பிறகு கர்ப்பிணிகளுக்கு தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல் உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனடியாக அவரை தடுப்பூசி போட்ட மையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். அங்குள்ள மருத்துவக் குழுவினர் திடீர் உடல்நலக் குறைவுக்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து சிகிச்சை தருவர்.
கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்பூட்னிக், மாடர்னா உள்ளிட்ட ஒன்றிய அரசால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் போட்டுக் கொள்ளலாம். இவை பாதுகாப்பானவையாகும்.












Click it and Unblock the Notifications