இன்று நாடு முழுவதும் உற்சாகமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்- ஜனாதிபதி வாழ்த்து
டெல்லி: நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்து மத பண்டிகைகளில் முக்கியமான ஒன்று விநாயகர் சதுர்த்தி. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
பொதுவாக விநாயகர் சதுர்த்தியின் போது ஒருவார காலம் பொது இடங்களிலும் வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். அதன்பின்னர் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும்.
இந்த ஆண்டு நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு வெளியூர் செல்லும் பொதுமக்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா திருத்தேரோட்டம் கொட்டும் மழையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள உலக பிரசித்திபெற்ற குடைவரைக் கோவிலான பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவரான கற்பக விநாயகர், தினமும் பல்வேறு வெள்ளி வாகனங்களில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். விழாவில் முக்கிய நாளான நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. பெரிய தேரில் உற்சவரான ஸ்ரீ கற்பக விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோன்று சிறிய தேரில் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் அருள்பாலித்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தமது வாழ்த்துச் செய்தியில் விநாயகர் சதுர்த்தியின் புனித நாளில், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஞானம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது. விநாயகப் பெருமான், விக்னஹர்தராகவும், மங்கலமூர்த்தியாகவும் கருதப்படுகிறார். இந்த தருணத்தில் அன்பு, அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி ஏற்பட விநாயகனை வழிபடுவோம் என கூறியுள்ளார்.
இதேபோல் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, நான் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அறிவு மற்றும் செழுமையின் கடவுளான விநாயகர் பிறந்த தினம் விநாயகர் சதுர்த்தியாக பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தில் முழு முதல் கடவுளாக ஒவ்வொரு பக்தர்களாலும் விநாயகர் போற்றப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி பண்டிகை, சாதி, நம்பிக்கை, மதம் அல்லது பிராந்திய எல்லைகளைக் கடந்து, இந்தியாவின் ஒருங்கிணைந்த கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. இந்நன்னாளில் அனைவரும் நல்ல உடல் நலம், மகிழ்ச்சி, வளமையுடன் வாழ நான் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications