இனி காலிப்பணியிடமே இல்லை.. ஹவுஸ்புல்.. உச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி
டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.
இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாக சுப்ரீம் கோர்ட் திகழ்கிறது. இந்த நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி அல்லாமல் 31 நீதிபதிகள் இருப்பது வழக்கம்.

ஆனால் கடந்த சில காலமாக 31 நீதிபதிகளில் 26 அல்லது 27 நீதிபதிகளே இருந்து வந்தனர். நீதிபதிகள் பற்றாக்குறையால் வழக்குகள் தேங்கி இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்தார். நீதிபதிகள் கவாய், சூரியகாந்த், அனிருத்த போஸ், போபண்ணா ஆகியோரை ஜனாதிபதி நியமனம் செய்தார்.
பொதுவாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொலீஜியம் குழுவே நியமித்து வருகிறது. இதற்கு மாறாத தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை மத்திய அரசு உருவாக்க முடிவு செய்தது. ஆனால் இதை உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள பி.ஆர்.கவாய், ஹிமாச்சல் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள சூர்யகாந்த், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருத்த போஸ், குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் தற்போது புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் நாளை அல்லது நாளை மறுநாள் பதவியேற்றுக் கொள்வர் என தெரிகிறது.
இவர்களில் அனிருத்த போல் மற்றும் போபண்ணா ஆகியோரின் பெயர்கள் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் கொலீஜியம் அமைப்பு அவர்களது பெயர்களை மீண்டும் பரிந்துரைத்து அது ஜனாதிபதியால் ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications