முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாள்- நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 2018 ஆகஸ்ட் 16-ந் தேதி 93வது வயதில் காலமானார். அவரது 2-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வாஜ்பாயின் நினைவு நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள சதைவ் அடல் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாய் நினைவுநாளை முன்னிட்டு தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, நாட்டின் முன்னேற்றத்துக்கு பிரதமர் ஆற்றிய சேவையை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறோம் என்றார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாஜ்பாயின் பணிகளை நினைவுகூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications