பொதுத்தேர்தலில் தவறாது வாக்களியுங்கள்.. குடியரசு தின உரையில் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்
டெல்லி:17வது லோக்சபா பொதுத் தேர்தலில் நம் வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
70வது இந்தியக் குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்துக்கு முன்தினம் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம்.
அதனை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு குடியரசு தின சிறப்பு உரையை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: குடியரசு தினம் இந்திய குடிமக்கள் அனைவரும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை நினைவுகூரும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

தியாகிகளை நினையுங்கள்
விடுதலைக்காக உயர்நீத்தவர்களை இந்த நேரத்தில் நினைத்துப்பார்க்க வேண்டும். காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை நாம் போற்ற வேண்டும். இந்த ஆண்டு சுதந்திர தினமும் நமக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைய உள்ளது.
|
காந்தியின் கொள்கைகள்
அக்டோபர் 2ம் தேதி மகாத்மாக காந்தியின் 150வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறோம். அவரது கொள்கைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்த இது சரியான தருணம்.

இந்தியா புரட்சி
டிஜிட்டல் தொடர்பு அளிப்பதில் இந்தியா பெரும் புரட்சியை நிகழ்த்தி உள்ளது. இந்திய விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். உயர் கல்வி நிறுவனங்களில் பதக்கங்களை பெறுவதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் உள்ளனர்.

தலைமை பதவிகளில் பெண்கள்
இன்று கல்வி, மருத்துவம், கலை, விளையாட்டு என அனைத்துத்துறைகளிலும் பெண்கள் தலைமைப் பதவி வகித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.2019ம் ஆண்டில் இந்தியக் குடிமக்கள் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான பொறுப்பு காத்திருக்கிறது.
|
வாக்களிக்க வேண்டுகோள்
17வது லோக்சபா தேர்தலில் நம் வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும். 21வது நூற்றாண்டில் பிறந்தவர்கள் முதல் முறையாக இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்பது கூடுதல் சிறப்பு என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications