புதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..!
டெல்லி: மத்திய அரசின் 3 புதிய வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய வேளாண் மசோதக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடும் முழுவதும் விவசாயிகளும், எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அரசு நினைத்ததை சாதித்துக்கொண்டது.
விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதை அரசிதழில் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

3 மசோதாக்கள்
விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாய சட்டம், விளைப்பொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகச் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்றையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த 3 மசோதாக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் பெரும் அமளியே நடைபெற்றது. அதில் 8 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சிகள் மனு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகக் கூடும் என்றும் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது என வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர். சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட இந்த 3 மசோதாக்களையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்க்கட்சிகள் என யாரிடமும் ஆலோசிக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக புகார் அளித்தனர்.

அரசிதழில் வெளியீடு
இந்நிலையில் மத்திய அரசின் 3 புதிய வேளாண் மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்து ஒப்புதல் வழங்கியுள்ளார். இது மத்திய அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. புதிய விவசாய மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில் ஜனாதிபதி இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த விவகாரத்தில் மத்திய அரசு நினைத்ததை சாதித்துவிட்டது.

எதிர்க்கட்சிகள் ஏமாற்றம்
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை எதிர்ப்பு இருந்தும் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்வார் என எதிர்பார்த்த எதிர்க்கட்சிகளுக்கு இது பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications