"காவி டிரஸ்.." ஸ்கூபா டைவிங்.. கடலுக்கு அடியில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை செய்த பிரதமர் மோடி
டெல்லி: குஜராத் மாநிலத்தில் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் துவாரகா பகுதியில் ஸ்கூபா டைவிங் செய்து பிரதமர் மோடி சிறப்புப் பூஜை செய்தார். இது தொடர்பான படங்கள் இணைய்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கக் குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி சென்றுள்ளார். இன்று வரப் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

நாட்டில் உள்ள புராதன இடங்களில் ஒன்றான துவாரகையில் பிரதமர் மோடி நீருக்கு அடியில் சென்று பூஜை செய்துள்ளார். இதற்காக அவர் குஜராத் கடற்கரையில் அரபிக்கடலில் மூழ்கி பூஜை செய்தார். இந்த துவாரகா பகுதிக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் வலுவான ஒரு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
ஒரு காலத்தில் செழித்து வளர்ந்த நகரமாக இருந்தத துவாரகா, இப்போது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இந்த பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நீருக்கு அடியில் பண்டைய துவாரகாவின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீருக்கு அடியில் பிரதமர் மோடி: இந்த இடத்திற்குத் தான் பிரதமர் மோடி நேரடி சென்று பூஜை செய்துள்ளார். அவர் பெய்ட் துவாரகா தீவுக்கு அருகில் உள்ள துவாரகா கடற்கரையில் ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்குச் சென்று பூஜை செய்துள்ளார்.
வரலாறு ரீதியாகவும் ஆன்மீகத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பிரார்த்தனை செய்யவே பிரதமர் மோடி ஸ்கூபா கியர் அணிந்து கொண்டு நீருக்கு அடியில் சென்றுள்ளார். காவி நிற உடை அணிந்து நீருக்கு அடியில் சென்று அவர் பூஜை செய்த படங்கள் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த புராதன நகருக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, கிருஷ்ணருக்கு அடையாளமாக மயில் இறகுகளைக் காணிக்கையாகச் செலுத்தினார்.
டிரெண்டிங் போட்டோ: இது குறித்த படங்களைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, "தண்ணீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவம். ஆன்மீக மகத்துவம் மற்றும் பக்தி கொண்ட ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்துள்ளேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணா. எங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக குஜராத்தின் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள துவாரகா தீவை ஓகாவுடன் இணைக்கும் 2.32 கிமீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள்-தங்கும் பாலமான 'சுதர்ஷன் சேதுவை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. பாலம் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இந்த கேபிள் பாலத்தில் ஸ்ரீமத் பகவத்கீதையின் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கேபிள் பாலம்: சுமார் 2.32 கிமீ நீளமுள்ள பாலத்தில் 900 மீட்டர் சென்ட்ரல் டபுள் ஸ்பான் கேபிள் ஸ்டேட் பகுதியாகவும் 2.45 கிமீ நீளச் சாலையாகும் உள்ளது. இந்த பாலத்தில் இரண்டு பக்கமும் 2.50 மீட்டர் அகல நடைபாதைகள் உள்ள நிலையில், இதில் சோலார் பேனல்களும் பொருத்தப்பட்டுள்ளது. . சுமார் ₹ 979 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கேபிள் பாலம் , புகழ்பெற்ற துவாரகாதீசர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரொம்பவே முக்கியமானதாக இருக்கும்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications