நாடு முழுவதும் உள்ள முக்கிய நாளிதழ்களின் தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
டெல்லி; இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நாளிதழ் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 500 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவிவருவது குறித்து மற்றும் அதற்கு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வெளியிடப்படுகிறது. மக்களை பீதிக்குள்ளாக்காத வகையில் செய்திகளை வெளியிடுவதில் செய்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையி பிரதமர் மோடி இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நாளிதழ் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும், அது தொடர்பான செய்திகள் தொடர்பாகவும் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி முக்கிய அறிவுறுத்தல்களை பிரதமர் வழங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications