Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தோனேஷிய நிலக்கரி இந்தியாவில் டபுள் ரேட்! ஏழைகள் பணத்தை அதானி எடுப்பது இப்படித்தான்- ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மின் கட்டண உயர்வுக்கு அதானியே காரணம் என்றும், பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு வெற்று காசோலையை கொடுத்து இருப்பதாகவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.

Prime Minister Narendra Modi gave blank check to Adani - Rahul Gandhi speech

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதானி இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்கி அதனை இந்தியாவிற்கு கொண்டு வரும் பொழுது அதன் விலையை இரண்டு மடங்காக உயர்த்துகிறார். அதன் மூலமாகவே நாட்டில் மின்சார கட்டண உயர்வை ஏற்படுகிறது. ஏழை மக்களுடைய பணத்தினை இந்த வகையில் அதானி நேரடியாக பறித்து வருகிறார். ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் மக்கள் கூடுதல் பணம் செலுத்தி வருகிறார்கள்.

Prime Minister Narendra Modi gave blank check to Adani - Rahul Gandhi speech

இந்தியாவில் நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றின் மூலமாக மட்டும் 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்து உள்ளது. இம்முறை மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து திருட்டு நடந்து இருக்கிறது. நீங்கள் ஸ்விட்சை அழுத்தினால் அதானியின் பாக்கெட்டில் பணம் விழும். இது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் இது குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆனால், இந்தியாவில் எதுவுமே நடக்கவில்லை.

Prime Minister Narendra Modi gave blank check to Adani - Rahul Gandhi speech

இதன் பின்னணியில் அதானி இருப்பதாக லண்டனில் இருந்து வெளியாகும் பினான்சியல் டைம்ஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது." என்று கூறிய ராகுல் காந்தி அந்த பத்திரிகையை செய்தியாளர்களை முன் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், "அதானிக்கு பிரதமர் நரேந்திர மோடி வெற்று காசோலை (Blank cheque) கொடுத்து இருக்கிறார். மோடி அதானிக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறார். நாட்டில் உள்ள அனைத்து துறைகளில் இருந்தும், ஒவ்வொரு இந்திய குடிமக்களின் வருமானத்தில் இருந்தும் அதானிக்கு பங்கு சென்று வருகிறது.

Prime Minister Narendra Modi gave blank check to Adani - Rahul Gandhi speech

அதானி ஏழை எளிய மக்களின் பணத்தை எடுக்கிறார். இது நேரடி திருட்டு. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது தொடர்பான விசாரணையை தொடங்குவோம்." என்று தெரிவித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், இந்தியா கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தொழிலதிபர் கௌதம் அதானியை சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அதானியை சந்தித்தது பற்றி நான் அவரிடம் கேட்கவில்லை என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+