45 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து செல்லும் இந்திய பிரதமர்! மோடி பயணத்திற்கான காரணம் இதுதான்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசுதுறை பயணமாக இன்று போலந்து செல்கிறார். அங்கு, அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசும் மோடி, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடுகிறார். போலந்து-இந்தியா தூதரக உறவின் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மோடி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் உறவை பலப்படுத்தும் விதமாக போலந்து-இந்தியா உறவு அமைந்நதிருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நேரத்தில், உக்ரைனிலிருந்த இந்திய மாணவர்களை மீட்க பெரிதும் உதவியது போலந்துதான். இது இந்தியா-போலந்து உறவின் பலத்தை எடுத்துக்காட்டியது. இந்த உறவை மேலும் பலப்படுத்தவும், ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக உறவை வளர்த்துக்கொள்ளவும் இந்தியா போலந்துடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறது.

இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக போலந்து செல்கிறார். சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் 1979ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். அதன் பின்னர் போலந்து செல்லும் முதல் பிரதமர் என்கிற பெருமையை இந்த பயணத்தின் மூலம் நரேந்திர மோடி பெறுகிறார். பிரதமரின் இந்த பயணத்தின்போது, புவிசார் அரசியல் பிரச்சினைகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போதைய நிலவரப்பில் போலந்தில் 25,000 இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இதில் 5000 பேர் மாணவர்கள். முதலீட்டை பொருத்தவரை, இந்தியாவின் ஐடி, மருந்துகள், பண்ணை வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ், ஸ்டீல் மற்றும் ரசாயனங்கள் போன்ற துறை சார்ந்த நிறுவனங்கள் போலந்தில் முதலீடு செய்துள்ளன. மறுபுறம் சுகாதாரப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் உலோகங்கள் போன்ற துறை சார்ந்த சுமார் 30 போலந்து நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.
இந்தியா-போலந்து இடையேயான தூதர உறவு தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இன்று பிரதமர் மோடியின் போலந்து பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதேபோல போலந்து தொழில்முனைவோர் இந்தியாவுடன் வணிகத்தை வளர்த்துக் கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே மோடியின் பயணம் இந்த முதலீடுகளை ஊக்குவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. போலந்தை தொடர்ந்து பிரதமர் மோடி உக்ரைனுக்கும் செல்கிறார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications