இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. நெதன்யாகுவுடன் பேசிய பிரதமர் மோடி! செங்கடலில் அமைதியை மீட்க முயற்சி?
டெல்லி: காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், போர் சூழல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.
சொந்த நிலத்திற்காக ஹமாஸும், அவர்களுக்கு எதிராக இஸ்ரேலும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த மோதல் கடந்த அக். 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஐநா பொதுச் சபையில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் காசாவில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் இதுகுறித்து கூறுகையில்,
"காசா விஷயத்தில் மனிதாபிமான தலையீடு அவசியம். இரு நாட்டுத் தீர்வே இஸ்ரேல் - பாலஸ்தீன் சர்ச்சை நிரந்தரத் தீர்வாக இருக்கும்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் பேசியிருக்கிறார். இந்த உரையாடலில் போர் குறித்தும், கடல்வழி போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்தும் பேசப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி x சோஷியல் மீடியா தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
Had a productive exchange of views with PM @netanyahu on the ongoing Israel-Hamas conflict, including shared concerns on the safety of maritime traffic. Highlighted India’s consistent stand in favour of early restoration of peace & stability in the region with continued…
— Narendra Modi (@narendramodi) December 19, 2023
அதேபோல, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்தும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டெடுப்பது குறித்தும் இந்தியா தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சமீப நாட்களாக அரபு நாடுகளை ஒட்டியுள்ள செங்கடல் வழித்தடத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நீண்டு வருகிறது. இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்களை அவர்கள் கடத்தி வருகின்றனர். எனவே இந்த பகுதியில் கடல் போக்குவரத்து ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. இந்நிலையில்தான் பிரதமர் மோடி, நெதன்யாகு உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த உரையாடல் மூலம் இரு நாடுகளும் சேர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வந்திருக்கலாம் எனவும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications