நாளை 'இந்தியா குளோபல் வீக் 2020': மாநாட்டில் முக்கிய உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
டெல்லி: "இந்தியா குளோபல் வீக் 2020" என்ற பெயரில் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியாவின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள் குறித்த சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையாற்ற உள்ளார்.
உலக நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை ஈர்ப்பதற்காக இந்தியா சார்பில் இங்கிலாந்தில் வரும் ஜூலை 9 முதல் 11ம் தேதி வரை 'இந்தியா குளோபல் வீக் 2020': என்ற பெயரில் மூன்று நாள் மாநாடு நடக்கிறது. வீடியோ கான்பிரஸ் வாயிலாக நடைபெற உள்ள மிகப்பெரிய சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தகவல் தொழில்நுட்ப மற்றும் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பலர் கலந்து கொள்ள உள்ளார்கள்.
கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து உலகம் வெளிவருவதால் இந்தியாவுக்கு ஏராளமான முதலீட்டு மற்றும் உற்பத்தி வாய்ப்புகள் உருவாகி வரும் சூழலில் "இந்தியா குளோபல் வீக் 2020" கருத்தரங்கு நடைபெறுவதால் முககியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது.
இந்த நிகழ்ச்சயில் பல்வேறு உலக நாட்டு தலைவர்கள், 250க்கும் மேற்பட்ட வணிகர்கள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான மனோஜ் லட்வா (இந்தியா இன்க் சிஇஒ) தெரிவித்தார்.
இங்கிலாந்து தரப்பில், இளவரசர் சார்லஸ் இந்த நிகழ்வில் சிறப்பு உரையை நிகழ்த்தவுள்ளார், வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், உள்துறை செயலாளர் பிரிதி படேல், சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் மற்றும் சர்வதேச வர்த்தக செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில் கைத்ரி குமாரும் பங்கேற்க உள்ளார். இங்கிலாந்தின் புதிய இந்திய தூதராக இவர் தான் பொறுப்பேற்கிறார்.
இந்தியா ஐஎன்சி நிறுவனத்தின் நிறுவனர் மனோஜ் லட்வா இது குறித்து தெரிவிக்கையில், பிரதமர் மோடியின் வருகை எங்களுக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இந்த நிகழ்ச்சியில் பேசுவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.உலகில் அளவில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடியின் பேச்சு அதிக கவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் குரலை உலகம் கேட்க இது சரியான தருணம், என்று கூறியுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாற்று பியூஸ் கோயல் இதில் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மொத்தம் 5000 உலக வல்லுனர்கள் பங்கேற்கிறார்கள். அதேபோல் 75+ நிகழ்வுகள் இதில் நடக்க உள்ளது. 250+ பேர் இதில் பேச உள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications