3 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்ததும் மோடி செய்த முதல் வேலை என்ன தெரியுமா?
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரணமடைந்தபோது பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கான அரசு முறை சுற்றுப் பயணத்தில் இருந்தார். இந்த நிலையில், நாடு திரும்பியதும் முதல் பணியாக, ஜெட்லி இல்லத்திற்கே சென்று, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் மோடி.
பிரதமர் மோடி பிரான்ஸ்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-பஹ்ரைன் ஆகிய மூன்று நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தில் இருந்தபோது, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, அருண் ஜெட்லி கடந்த சனிக்கிழமை காலை, மரணமடைந்தார்.
இந்த செய்தி கிடைத்ததும், தாயகம் திரும்ப மோடி திட்டமிட்டார். ஆனால், ஜெட்லியின் குடும்பத்தினர், நாட்டுக்கான பணியில் இருக்கும்போது பாதியில் திரும்ப வேண்டாம் என மோடியிடம் கேட்டுக் கொண்டனர்.

நாடு திரும்பினார்
ஜெட்லியின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடந்தன. இந்த நிலையில், இன்று காலை, வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருந்து திரும்பினார் பிரதமர் மோடி. இதையடுத்து மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெற்கு டெல்லியில் உள்ள ஜெட்லியின் வீட்டிற்குச் சென்று அவரின், மனைவி மற்றும் பிள்ளைகளை சந்தித்து பேசினர்.

மரியாதை
ஜெட்லி வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மோடி. முன்னதாக ஜெட்லி மறைவையடுத்து, டுவிட்டர் வழியாக, தனது இரங்கலை மோடி தெரிவித்திருந்தார்.

மரியாதை
ஜெட்லி வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மோடி. முன்னதாக ஜெட்லி மறைவையடுத்து, டுவிட்டர் வழியாக, தனது இரங்கலை மோடி தெரிவித்திருந்தார்.

உருகிய மோடி
பஹ்ரைனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தனது உரையின் போது உணர்ச்சிவசப்பட்டு, "எனது நண்பர் அருண்" உலகை விட்டு சென்றபோது இவ்வளவு தொலைவில் நான் இருக்க வேண்டியதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று உருக்கமாக தெரிவித்தார்.

மோடி பேச்சு
நான் கடமைக்கு கட்டுப்பட்ட ஒரு மனிதன். பஹ்ரைனில் உற்சாகமான சூழல் இருக்கும் நேரத்தில், நம் நாடு கிருஷ்ண ஜென்மாஷ்டமியைக் கொண்டாடும் ஒரு நல்ல நேரத்தில், நான் இங்கே என் இதயத்தில் ஆழ்ந்த துக்கத்துடன் இருக்கிறேன். நான் பொது வாழ்க்கையில் ஒன்றாக அரசியல் பயணத்தை மேற்கொண்டது ஜெட்லியுடன்தான். அவருடன் நான் எப்போதுமே இணைந்திருந்தேன், அவருடன் நான் போராட்டங்களை எதிர்கொண்டேன், கனவு கண்டேன், அந்த கனவுகளை நிறைவேற்றினேன்", என்று பிரதமர் மோடி கூறினார்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications