பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன்... பிரதமர் நரேந்திர மோடி இன்று திடீர் ஆலோசனை.. காரணம் இது தான்
டெல்லி: பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.
Recommended Video
நாட்டின் எந்தப் பகுதியும் வளர்ச்சிப் பாதையில் இருந்து விலகிவிடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த காணொலி கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட அளவில் பல்வேறு திட்டங்களைத் துரிதமாக நிறைவேற்றுவதை இந்த கலந்துரையாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது

இதற்காக பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.
இந்த உரையாடலின் போது, மாவட்டங்களில் அரசுத் திட்டங்களின் செயல்பாட்டின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் நேரடியாகக் கருத்துக் கேட்கிறார். செயல்திறனை மதிப்பாய்வு செய்யவும், எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறியவும் இது உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்து பங்குதாரர்களுடனும் ஒன்றிணைந்து, மாவட்டங்களில் உள்ள பல்வேறு துறைகளின் பல்வேறு திட்டங்களை வேகமாகச் செயல்படுத்துவதை இக்கலந்துரையாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சமச்சீரற்ற தன்மையை நீக்கப் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அனைத்து குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்குமான அரசின் உறுதிப்பாட்டோடு இது இணைந்துள்ளது என்றும் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications