Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

180 கி.மீ வேகம்..வந்தே பாரத்துக்கே டஃப் கொடுக்கும் நமோ பாரத் ரயில்! பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மணிக்கு சுமார் 180 கி.மீ வேகத்தில் இயங்கும் நாட்டின் முதல் நமோ பாரத் ரயில் சேவையை(ரேபிட் ரயில்) பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இது குறைந்த தொலைவில் உள்ள நகரங்களை இணைக்க உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறையானது உலகில் இருக்கும் மிகப்பெரிய ரயில்வேக்களில் ஒன்றாகும். இதுவரை இது ஏராளமான சாதனைகளை செய்துள்ளது. இந்நிலையில், இதனைத் தொடர்ந்து தற்போது புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. அதாவது, குறைந்த தூரங்களில் உள்ள நகரங்களை இணைக்க ரேபிட் ரயில் திட்டத்தை (RRTS) செயல்படுத்தியுள்ளது. உதாரணமாக டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகருக்கு இடையே 82 கி.மீ இருக்கிறது. சாதாரணமாக பயண தூரம் 2-2.30 மணி நேரம் ஆகும். ஆனால் இதே ரேபிட் ரயிலில் வெறும் 1 மணி நேரத்தில் பயணிக்கலாம்.

 Prime Minister Narendra Modi will inaugurate the countrys first rapid rail project today

இந்த ரயில் பார்ப்பதற்கு மெட்ரோவை போலவே இருக்கும். இருந்தாலும் இதன் வேகம் மணிக்கு 180 கி.மீ-ஐ எட்டும் என்பதுதான் இதன் சிறப்பம்சம். கடந்த 2005ம் ஆண்டு திட்ட கமிஷன், டெல்லிக்கு பல்வேறு விதமான போக்குவரத்தை உருவாக்க திட்டமிட்டது. அப்படிதான் இந்த ரேபிட் ரயில் உருவாக்கியுள்ளது. டெல்லியிலிருந்து-மீரட் வரை, டெல்லி-பானிபட் மற்றும் டெல்லி-ஆல்வார் ஆகிய நகரங்களையும் இந்த ரயில் விரைவில் இணைக்கும். இதற்காக மத்திய அரசு, டெல்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் இணைந்து நிதியை ஒதுக்கியுள்ளன.

இது பெரிய புராஜெக்ட் என்பதால் தற்போது டெல்லியிலிருந்து-மீரட் வரை உள்ள 82 கி.மீ தூரத்தில் 17 கி.மீக்கான பணிகள் முற்றிலுமாக முடிவடைந்துள்ளன. எனவே இந்த தொலைவில் உள்ள துஹாய் முதல் சாஹியாபாத் வரை இந்த ரேபிட் ரயில் இயக்கப்படுகிறது. இதைத்தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். பச்சை கொடி அசைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இதே ரயிலில் மாணவர்களுடன் பயணித்துள்ளார். டெல்லியிலிருந்து-மீரட் முழு பாதையும் 2025ம் ஆண்டில் முடிவடையும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. தற்போது இன்று இயக்கப்படும் ரயில் சாஹியாபாத், காஸியாபாத், குல்தார், துஹாய், துஹாய் டிப்போ ஆகிய ரயில் நிலையங்களை இணைக்கிறது.

 Prime Minister Narendra Modi will inaugurate the countrys first rapid rail project today

மொத்தம் 6 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் தலா 72 இருக்கைகள் இருக்கிறது. தவிர மானிட்டரிங் சிஸ்டம், வைஃபை வசதி, தானியங்கி உணவுப் பொருட்கள் வழங்கும் ஏடிஎம் போன்ற வசதிகளும் இந்த ரயிலில் இருக்கின்றன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முடிவுற்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+