180 கி.மீ வேகம்..வந்தே பாரத்துக்கே டஃப் கொடுக்கும் நமோ பாரத் ரயில்! பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
டெல்லி: மணிக்கு சுமார் 180 கி.மீ வேகத்தில் இயங்கும் நாட்டின் முதல் நமோ பாரத் ரயில் சேவையை(ரேபிட் ரயில்) பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இது குறைந்த தொலைவில் உள்ள நகரங்களை இணைக்க உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையானது உலகில் இருக்கும் மிகப்பெரிய ரயில்வேக்களில் ஒன்றாகும். இதுவரை இது ஏராளமான சாதனைகளை செய்துள்ளது. இந்நிலையில், இதனைத் தொடர்ந்து தற்போது புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. அதாவது, குறைந்த தூரங்களில் உள்ள நகரங்களை இணைக்க ரேபிட் ரயில் திட்டத்தை (RRTS) செயல்படுத்தியுள்ளது. உதாரணமாக டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகருக்கு இடையே 82 கி.மீ இருக்கிறது. சாதாரணமாக பயண தூரம் 2-2.30 மணி நேரம் ஆகும். ஆனால் இதே ரேபிட் ரயிலில் வெறும் 1 மணி நேரத்தில் பயணிக்கலாம்.

இந்த ரயில் பார்ப்பதற்கு மெட்ரோவை போலவே இருக்கும். இருந்தாலும் இதன் வேகம் மணிக்கு 180 கி.மீ-ஐ எட்டும் என்பதுதான் இதன் சிறப்பம்சம். கடந்த 2005ம் ஆண்டு திட்ட கமிஷன், டெல்லிக்கு பல்வேறு விதமான போக்குவரத்தை உருவாக்க திட்டமிட்டது. அப்படிதான் இந்த ரேபிட் ரயில் உருவாக்கியுள்ளது. டெல்லியிலிருந்து-மீரட் வரை, டெல்லி-பானிபட் மற்றும் டெல்லி-ஆல்வார் ஆகிய நகரங்களையும் இந்த ரயில் விரைவில் இணைக்கும். இதற்காக மத்திய அரசு, டெல்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் இணைந்து நிதியை ஒதுக்கியுள்ளன.
இது பெரிய புராஜெக்ட் என்பதால் தற்போது டெல்லியிலிருந்து-மீரட் வரை உள்ள 82 கி.மீ தூரத்தில் 17 கி.மீக்கான பணிகள் முற்றிலுமாக முடிவடைந்துள்ளன. எனவே இந்த தொலைவில் உள்ள துஹாய் முதல் சாஹியாபாத் வரை இந்த ரேபிட் ரயில் இயக்கப்படுகிறது. இதைத்தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். பச்சை கொடி அசைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இதே ரயிலில் மாணவர்களுடன் பயணித்துள்ளார். டெல்லியிலிருந்து-மீரட் முழு பாதையும் 2025ம் ஆண்டில் முடிவடையும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. தற்போது இன்று இயக்கப்படும் ரயில் சாஹியாபாத், காஸியாபாத், குல்தார், துஹாய், துஹாய் டிப்போ ஆகிய ரயில் நிலையங்களை இணைக்கிறது.

மொத்தம் 6 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் தலா 72 இருக்கைகள் இருக்கிறது. தவிர மானிட்டரிங் சிஸ்டம், வைஃபை வசதி, தானியங்கி உணவுப் பொருட்கள் வழங்கும் ஏடிஎம் போன்ற வசதிகளும் இந்த ரயிலில் இருக்கின்றன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முடிவுற்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications