ராகுல் காந்தி இந்துக்களை சொல்லவில்லை.. பாஜக இத்தோட நிறுத்திக்கனும்! அண்ணனுக்கு ஆதரவாக வந்த பிரியங்கா
டெல்லி: மக்களவையில் நேற்று பேசிய எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்துக்களை இழிவாகப் பேசியதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்துக்கள் குறித்து ராகுல் காந்தி பேசவில்லை எனவும், அவர் பாஜகவினரை தான் பேசினார் என அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியாங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான் விவாதத்தை தொடங்கி வைத்து பாஜக எம்பி அனுராக் சிங் தாக்கூர் பேசினார்.

ஆனால் நீட் தேர்வு குறித்து பேச வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிறகு எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை கூறலாம் என சபாநாயகர் கூறியதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமலியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு கடவுளுடன் நேரடி தொடர்பு இருப்பதாக கூறுகிறார். அவர் நேரடியாகவே பரமாத்மாவுடன் பேசுவார். பரமாத்மாவும் நேரடியாகவே மோடியின் ஆன்மாவோடு பேசுவார். பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. அவர்கள் இந்து மதத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. இவ்வாறு ராகுல் காந்தி பேசியபோது, பாஜகவினர் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அமலியில் ஈடுபட்டனர்.

மேலும், ராகுலின் பேச்சு, இந்து சமூக மக்கள் மீதான தாக்குதல் என்றும், இந்துக்களை அவர் வன்முறையாளர்கள் போல சித்தரிக்க முயலுகிறார் என்று பிரதமர் மோடி குறுக்கிட்டுக் கூறினார். மேலும் இந்துக்களை வன்முறையாளர்கள் என ராகுல் காந்தி பேசியதாக அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ராகுல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக எம்பிகள் முழக்கமிட்டனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி இந்துக்களை வன்முறையாளர்கள் என்று அழைத்ததாக பாஜக குற்றம்சாட்டிய நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது சகோதரரான ராகுல்காந்தி இந்துக்களை அவமதிக்கவில்லை எனவும் அதே நேரத்தில், பாஜக மற்றும் அதன் தலைவர்களைப் பற்றியே பேசினார் என விளக்கம் அளித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியின் முதல் உரைக்குப் பிறகு, தனது தாயார் சோனியா காந்தியுடன் பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து பிரியங்கா காந்தி வெளியே வந்தார்.
அப்போது பேசிய அவர்,""அவரால் இந்துக்களை அவமதிக்க முடியாது. அவரது உரையில் அவர் மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். ராகுல் காந்தி பாஜகவைப் பற்றியும், பாஜக தலைவர்களைப் பற்றி மட்டுமே பேசினார்" என்றார்.
மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"பணவீக்கத்தை எண்ணி பெண்களும், கருப்புச் சட்டங்களை எண்ணி விவசாயிகளும், அக்னிவீரர் திட்டத்தை எண்ணி இளைஞர்களும், வினாத்தாள் கசிவை எண்ணி மாணவர்களும், தங்கள் மீதான வெறுப்பு மற்றும் வன்முறையை எண்ணி சிறுபான்மை மக்களும் அச்சத்தில் உள்ளனர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அச்ச உணர்வை எங்கும், எதிலும் பரப்புகிறது. மக்கள் மத்தியில் அச்சம், வன்முறை மற்றும் வெறுப்பினை பரப்பும் யாரும் அதன் ஊடாக பலன் அடைய முடியாது. பாஜக இந்த பாணி அரசியலை இப்போது நிறுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.
-
மக்களவையில் டென்ஷன்: சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! இன்று அரங்கேறும் அக்னிப்பரீட்சை -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி












Click it and Unblock the Notifications