காலக் கொடுமை! நபிகள் நாயகம் அவதூறு விவகாரத்தில் இந்தியாவுக்கு பாடம் எடுக்கும் 'சுள்ளான்' தலிபான்கள்
டெல்லி: இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்த பாஜகவினரின் அவதூறு விவகாரத்தில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியிருக்கும் தலிபான்கள் இந்தியாவுக்கு மதவெறி தொடர்பாக பாடம் நடத்தும் நிலைமை உருவாகிவிட்டதாக மூத்த அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொலைக்காட்சி விவாதம் மற்றும் சமூக வலைதளங்களில் பாஜகவின் மூத்த தலைவர்களான நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோ நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியும் பதிவிட்டும் வந்தனர். இது மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கான்பூர் வன்முறை
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பாஜக தலைவர்களின் இந்த பேச்சுக்கு எதிராக போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. கான்பூர் வன்முறையால் ஏற்பட்ட பதற்றம் இன்னனும் ஓயவில்லை.இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்த அவதூறு விவகாரம் சர்வதேச பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்தது.

சர்வதேசம் கண்டனம்
பாஜகவினரின் கருத்து என்பது உருமாறி நபிகள் நாயகம் குறித்த அவதூறு என்பது இந்தியாவின் கருத்தாகவும் சர்வதேச அளவில் மையம் கொண்டுவிட்டது. இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.ஈரான், ஈராக், குவைத், கத்தார், செளதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், பாகிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவுகள், லிபியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்திய அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்த நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
Recommended Video

கைது செய்ய வலியுறுத்தல்
இதனையடுத்து பாஜகவின் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் இருவரும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனாலும் இந்தியாவுக்கு அவமாவனத்தை உருவாக்கிவிட்ட இந்த இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் நுபுர் சர்மா மீது பல இடங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மத்திய பாஜக அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளன.

தலிபான்களும் அட்வைஸ்
இந்த விவகாரத்தில் மதவெறியுடன் ஆயுதம் தூக்கி வன்முறையால் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருக்கும் தாலிபான்கள் கூட இந்தியாவுக்கு பாடம் நடத்துவது என்பதுதான் சகிக்க முடியாததாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தாலிபான்களின் செய்தித் தொடர்பாளரான Zabihullah Mujahid இது தொடர்பாக கூறுகையில், இத்தகைய மதவெறியை தூண்டும் வகையிலான பேச்சுகளை இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது; இஸ்லாமியர்களின் உணர்வுகளை வெறுப்பேற்றுகிற போக்கை நிறுத்த வேண்டும் என்றார். மேலும் நபிகள் நாயகம் குறித்த அவதூறுக்கு கடும் கன்டனத்தை தெரிவிக்கிறோம் என்றும் அவர் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மத்தியில் ஆளும் பாஜகவினரின் வாய் துடுக்கால் இப்போது ஒட்டுமொத்த தேசமும் சுள்ளான் தாலிபான்களிடம்கூட கண்டனத்தை பெறும் நிலையில் இருப்பது வேதனைக்குரியது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
இந்தியாவில் முதல்முறை! சிறந்த பணியிட மகிழ்ச்சி விருதுகள் அறிமுகம்! ஹர்ஷ் கோயங்கா தலைமையில் மெகா டீம் -
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள்












Click it and Unblock the Notifications