டெல்லியில் நள்ளிரவில் கெஜ்ரிவால் இல்லத்தை ஜாமியா மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
டெல்லி: டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தை நள்ளிரவில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இது இரு சமூகங்களிடையேயான மோதலாகவும் வெடித்தது. இதனால் வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகள் போர்க்களமாக மாறின.

இந்த வன்முறைகளில் 13 பேர் பலியாகினர். 160 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து டெல்லியின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. டெல்லி வன்முறைகளைக் கட்டுப்படுத்த துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தை நள்ளிரவில் ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வடகிழக்கு டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

Delhi: Police disperse the people who had gathered outside Chief Minister Arvind Kejriwal's residence demanding action against #DelhiViolence and seeking restoration of peace. https://t.co/NWz03HQkQT pic.twitter.com/ybGwIw0cqo
— ANI (@ANI) February 25, 2020
மேலும் வடகிழக்கு டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளை அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட வேண்டும்; அமைதியை நிலைநாட்ட கெஜ்ரிவால் மற்றும் எம்.எல்.ஏக்கள் பேரணி நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அத்துடன் டெல்லியில் அமைதியை நிலைநாட்ட அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பொதுமக்களிடம் கெஜ்ரிவால் விளக்கி அமைதியை உருவாக்க வேண்டும் என்றும் அந்த மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications