புல்வாமா தாக்குதல்.. தீவிரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான்தான் பாதுகாக்கிறது.. இந்தியா கடும் கண்டனம்!
பாகிஸ்தான் தொடர்ந்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசாருக்கு இடமளித்து வருகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேட்டி அளித்துள்ளார்.
டெல்லி: புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு முழு பொறுப்பு பாகிஸ்தான் மட்டும்தான், பாகிஸ்தான் தொடர்ந்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசாருக்கு இடமளித்து வருகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேட்டி அளித்துள்ளார்.
கடந்த வருடம் பிப்ரவரி 14ம் த்தி காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.
இது தொடர்பாக தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த 13,500 பக்க குற்றப்பத்திரிகை பல உண்மைகளை இது தொடர்பாக வெளிப்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 19 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்கள்.

பாகிஸ்தான் எப்படி
இந்த குற்றப்பத்திரிக்கை தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேட்டி அளித்துள்ளார். அதில், புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு முழு பொறுப்பு பாகிஸ்தான் மட்டும்தான்.பாகிஸ்தான் தொடர்ந்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசாருக்கு இடமளித்து வருகிறது. ஒன்றரை வருடமாக புல்வாமா தாக்குதல் குறித்த விசாரணை நடந்து வருகிறது. விசாரணையை தொடர்ந்து தற்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எங்கே இருக்கிறார்
புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம்தான் உரிமை கோரியது. இந்த அமைப்பும் அதன் தலைவரும் பாகிஸ்தானில்தான் இருக்கிறார்கள். இந்த கொலைவெறி தாக்குதலின் மூளையாக செயல்பட்ட மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருக்கிறார். பாகிஸ்தான் அவருக்கு சுதந்திரமான புகலிடம் அளித்து வருகிறது.

ஆதாரம் என்ன
இது தொடர்பான ஆதாரங்கள் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு உள்ளது . ஆனாலும் பாகிஸ்தான் இதில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து பாகிஸ்தான் இதில் பொறுப்பேற்காமல் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் தனது செயலில் இருந்து தப்பிக்க பார்க்கிறது. நாங்கள் இதில் கண்டிப்பாக தீவிரமாக செயல்படுவோம்.
Recommended Video

இதுவரை எடுக்கவில்லை
இதில் பாகிஸ்தான் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எங்களின் நோக்கம் இதில் அறிக்கை விடுவது இல்லை. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக மோசமான தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடியை சட்ட பூர்வமாக கொடுக்க வேண்டும். உலக நாடுகளை பாகிஸ்தான் ஏமாற்ற நினைக்கிறது. ஆனால் உலக நாடுகள் இதில் ஏமாற்றம் அடையாது, என்று ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications