பஞ்சாப் பிரசாரத்தில் களமிறங்கும் கெஜ்ரிவால் மனைவி, மகள்... அனல் பறக்க ரெடியாகும் ஆம் ஆத்மி
டெல்லி: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி மற்றும் மகள் பிரசாரம் செய்யவுள்ளனர்.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்துக் கட்சிகளும் துரிதமாக செயல்பட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிப் போட்டியிடுகிறது. பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சிக்கு வரவேற்பு இருக்கிறது.

ஆம் ஆத்மி
பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மாற்றம் கொண்டு வரவே ஆம் ஆத்மி போட்டியிடுவதாக அறிவித்தது. பஞ்சாப் முதல்வரை மக்களே தேர்ந்தெடுக்கலாம் என கூறப்பட்டு, அதற்காக மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. 21 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று பகவந்த் மான் தேரானார்.

பகவந்த் மான்
சங்ரூர் மக்களைவை உறுப்பினராக இருக்கும் பகவந்த் மான், பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவராக உள்ளார். தற்போது முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மான், தூரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு பஞ்சாப் மக்களிடையே நல்ல அறிமுகம் இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்
பஞ்சாப் தேர்தல் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ''பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்பது தெளிவாகிறது. முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர்தான் பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதல்வராக வருவார். ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆளும் காங்கிரஸுக்கு சவாலாக மாறியுள்ளது. 117 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாபில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மான் தலைமையிலான ஆம் ஆத்மி 20 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது'' என்றார்.

கெஜ்ரிவால் மனைவி
அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா மற்றும் மகள் ஹர்ஷிதா அடுத்த வாரம் நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரசாரம் செய்யவுள்ளனர். இதுகுறித்து கெஜ்ரிவாவின் மனைவி சுனிதா ட்விட்டரில், "நாளை எனது மைத்துனர் பகவந்த் மானிக்கு வாக்கு கேட்க எனது மகளுடன் தூரிக்கு செல்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications