பஞ்சாப் ரிபப்ளிக் டிவி எக்ஸிட் போல்: கடைசி இடத்திற்கு தள்ளப்படும் பாஜக.. தூள் கிளப்பும் ஆம் ஆத்மி!
டெல்லி: பஞ்சாப்பில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியே தனிபெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என ரிபப்ளிக் டிவி பி மார்க் எக்ஸிட் போல் முடிவுகள் கணித்துள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் என நான்கு முனை போட்டி நிலவியது. இதில் காங்கிரஸ் சார்பில் ஏற்கெனவே சில மாதங்களே முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வர் வேட்பாளராகவும் ஆம் ஆத்மி சார்பில் பகவந்த் மானும் அறிவிக்கப்பட்டனர்.

கடும் போட்டி
இந்த நிலையில் இவர்களுக்கிடையே போட்டி கடுமையாக இருந்த நிலையில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது குறித்து பல செய்தி நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளன. அதில் பஞ்சாபில் ரிபப்ளிக் டிவி பி மார்த் எக்ஸிட் போல் நடத்திய கணிப்பில் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

எத்தனை இடங்கள்
நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி 62-70 இடங்களிலும் காங்கிரஸ் 23-31 இடங்களிலும், அகாலி தளம் 16-24 இடங்களிலும் பாஜக கூட்டணி 1-3 இடங்களிலும் இதர கட்சிகள் 1 முதல் 3 இடங்கள் வரை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில் பஞ்சாபை தவிர 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியே இருந்தது. இதனால் பஞ்சாபில் இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வந்தது.

காங்கிரஸ் ஆட்சி
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜக 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி வென்றது. அங்கு பாஜக - சிரோன்மணி அகாலிதளம் கூட்டணி ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்து காங்கிரஸ் சார்பாக அமரீந்தர் சிங் முதல்வராக தேர்வானார். அந்த தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களை வென்று அபார வெற்றிபெற்றது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களை வென்றது. பாஜக - சிரோன்மணி அகாலிதளம் 18 இடங்களை வென்றது. லோக் இன்சாப் கட்சி 2 இடங்களை வென்றது. அமரீந்தர் சிங் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய முதல்வராக சரண்ஜித் சன்னி நியமிக்கப்பட்டார். கடந்த தேர்தலில் 3 ஆவது இடத்திற்கு வந்த ஆம் ஆத்மி இந்த முறை கருத்து கணிப்பில் ஆட்சியை பிடிக்கும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications