டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரபேல் வழக்கில் திருப்பம்.. கசிந்த ஆதாரங்களை விசாரிக்கலாம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரபேல் வழக்கில் கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Rafale வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    டெல்லி: ரபேல் வழக்கில் கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. நாளிதழ்களில் ரபேல் தொடர்பாக கசிந்த ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது குறித்த அனைத்து வாதங்களும் முடிவிற்கு வந்துள்ள நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    தற்போது வழங்கப்பட்டு இருக்கும் தீர்ப்பு ரபேல் வழக்கில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரபேல் ஆவணங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணையில் இது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

    ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் இந்த வழக்கின் கோரிக்கை. இது தொடர்பான மறுசீராய்வு வழக்கு இரண்டு மாதமாக நடந்து வருகிறது.

    இருக்கிறதே இரண்டு இலைதான்.. ஒன்றில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்!இருக்கிறதே இரண்டு இலைதான்.. ஒன்றில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்!

    ரபேல் வழக்கு

    ரபேல் வழக்கு

    இந்த ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தொடுத்தனர். சென்ற வருடம் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ரபேல் ஒப்பந்தம் மத்திய அரசின் கொள்கை முடிவு, இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    சீராய்வு மனு

    சீராய்வு மனு

    இதில் தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது விசாரிக்கப்படுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.

    தி இந்து ஆதாரம்

    தி இந்து ஆதாரம்

    இந்த வழக்கு பெரிய அளவில் முன்னுக்கு நகராமல் இருந்த சமயத்தில் தி இந்து பத்திரிக்கையில் மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் எழுதிய கட்டுரைகள் வந்தது. ரபேல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு செய்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த கட்டுரையில் நிறைய ஆதாரங்கள் இருந்தது. பாதுகாப்பு துறையில் இருந்து கசிந்த ஆதாரங்களை இவர் வெளியிட்டு இருந்தார்.

    நீதிமன்றம்

    நீதிமன்றம்

    இந்த ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆதாரங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் இதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பு கூறியது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    கருத்து

    கருத்து

    இதுவரை இதில் கருத்து தெரிவித்த மூன்று நீதிபதிகளும், திருடப்பட்ட, கசிந்த ஆவணமாக இருந்தாலும் கூட, ராணுவ ரகசியமாக இருந்தாலும் கூட அதை கருத்தில் கொள்ளலாம், என்று தெரிவித்தனர். ஏற்கனவே இதுபோன்ற ஆதாரங்களை போபர்ஸ், 2ஜி வழக்கில் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம் என்று நீதிபதிகள் கூறினர். இதில் நீதிபதிகள் மத்திய அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பினார்கள்.

    இன்று தீர்ப்பு

    இன்று தீர்ப்பு

    ரபேலில் கசிந்த ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது குறித்த அனைத்து வாதங்களும் முடிவிற்கு வந்துள்ளது. ரபேல் வழக்கில் கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தி இந்து இதழில் வெளியான ஆதாரங்களை ஏற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

    English summary
    Rafale Deal: Supreme Court will give its order on investigating leaked documents today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X