Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2ஜிக்கு ஒரு நியாயம்.. ரபேலுக்கு ஒரு நியாயமா? சுப்ரீம் கோர்ட்டில் கொதித்த பிரஷாந்த் பூஷன்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2ஜி வழக்கில் திருடப்பட்ட ஆவணங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ரபேல் வழக்கிலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மத்திய அரசுக்கு எதிராக வாதம் வைத்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் தொடங்கி ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கி உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இதை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் வாதம் செய்த அரசு தரப்பு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் தேசிய பாதுகாப்பு குறித்து பேசினார். அது தொடர்பாக நிறைய விவாதங்களை வைத்தார்.

ரபேல் தேவை

ரபேல் தேவை

கேகே வேணுகோபால் தனது வாதத்தில், ரபேல் விமானங்கள் நமக்கு உடனடியாக தேவை. அப்போதுதான் எப்-16 விமான தாக்குதலில் இருந்து நாட்டை காக்க முடியும். ரபேல் விமான பயிற்சிக்காக ஏற்கனவே விமானிகள் பிரான்ஸ் சென்றுவிட்டனர்.

தவறில்லை

தவறில்லை

இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ரபேல் வழக்கின் தீர்ப்பை மறுசீராய்வு மட்டுமே செய்கிறோம். ஏதாவது ஆதாரங்களை விட்டுள்ளோமா என்று பார்க்கிறோம். நாங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து இங்கு விவாதிக்கவில்லை. அதனால் அரசு தரப்பு ரபேல் விமான குறித்து கவலைப்பட வேண்டாம், என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டார்..

தேசம் பாதுகாப்பு

தேசம் பாதுகாப்பு

இந்த ரபேல்தான் தேசத்தை பாதுகாக்கும். ரபேலை வைத்து அரசியல் செய்கிறார்கள். சிஏஜி அறிக்கை நாடாளுமன்றம் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இதை பார்த்துக்கொள்ளும். இதில் சமர்பிக்கப்பட்ட திருடப்பட்ட ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்க கூடாது, என்று கேகே வேணுகோபால் மீண்டும் குறிப்பிட்டார்.

கடும் கேள்வி

கடும் கேள்வி

மனுதாரர் மற்றும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், ரபேல் ஆதாரங்களை தி இந்து, ஏஎன்ஐ இரண்டு நிறுவனங்களும் வெளியிட்டது. திருடப்பட்ட ஆவணங்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கலாம். 2ஜி வழக்கில் இப்படிப்பட்ட ஆவணங்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர், என்று குறிப்பிட்டார்.

ஒரு தவறும் இல்லை

ஒரு தவறும் இல்லை

அதேபோல் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண் சோரி, ரபேல் ஆவணங்களை உலகமே பார்த்துவிட்டது. மக்கள் எல்லோர்க்கும் இதில் குளறுபடி நடந்து இருப்பது தெரியும். அதனால் கோர்ட்டும் அதை விசாரிப்பதில் தவறில்லை, என்றார். இதையடுத்து ரபேல் வழக்கு மார்ச் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+