2ஜிக்கு ஒரு நியாயம்.. ரபேலுக்கு ஒரு நியாயமா? சுப்ரீம் கோர்ட்டில் கொதித்த பிரஷாந்த் பூஷன்!
டெல்லி: 2ஜி வழக்கில் திருடப்பட்ட ஆவணங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ரபேல் வழக்கிலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மத்திய அரசுக்கு எதிராக வாதம் வைத்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தொடங்கி ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கி உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இதை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் வாதம் செய்த அரசு தரப்பு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் தேசிய பாதுகாப்பு குறித்து பேசினார். அது தொடர்பாக நிறைய விவாதங்களை வைத்தார்.

ரபேல் தேவை
கேகே வேணுகோபால் தனது வாதத்தில், ரபேல் விமானங்கள் நமக்கு உடனடியாக தேவை. அப்போதுதான் எப்-16 விமான தாக்குதலில் இருந்து நாட்டை காக்க முடியும். ரபேல் விமான பயிற்சிக்காக ஏற்கனவே விமானிகள் பிரான்ஸ் சென்றுவிட்டனர்.

தவறில்லை
இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ரபேல் வழக்கின் தீர்ப்பை மறுசீராய்வு மட்டுமே செய்கிறோம். ஏதாவது ஆதாரங்களை விட்டுள்ளோமா என்று பார்க்கிறோம். நாங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து இங்கு விவாதிக்கவில்லை. அதனால் அரசு தரப்பு ரபேல் விமான குறித்து கவலைப்பட வேண்டாம், என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டார்..

தேசம் பாதுகாப்பு
இந்த ரபேல்தான் தேசத்தை பாதுகாக்கும். ரபேலை வைத்து அரசியல் செய்கிறார்கள். சிஏஜி அறிக்கை நாடாளுமன்றம் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இதை பார்த்துக்கொள்ளும். இதில் சமர்பிக்கப்பட்ட திருடப்பட்ட ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்க கூடாது, என்று கேகே வேணுகோபால் மீண்டும் குறிப்பிட்டார்.

கடும் கேள்வி
மனுதாரர் மற்றும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், ரபேல் ஆதாரங்களை தி இந்து, ஏஎன்ஐ இரண்டு நிறுவனங்களும் வெளியிட்டது. திருடப்பட்ட ஆவணங்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கலாம். 2ஜி வழக்கில் இப்படிப்பட்ட ஆவணங்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர், என்று குறிப்பிட்டார்.

ஒரு தவறும் இல்லை
அதேபோல் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண் சோரி, ரபேல் ஆவணங்களை உலகமே பார்த்துவிட்டது. மக்கள் எல்லோர்க்கும் இதில் குளறுபடி நடந்து இருப்பது தெரியும். அதனால் கோர்ட்டும் அதை விசாரிப்பதில் தவறில்லை, என்றார். இதையடுத்து ரபேல் வழக்கு மார்ச் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications