நாங்க ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை இதுதான்.. பாஜகவை எச்சரிக்கும் காங். தேர்தல் அறிக்கை
Recommended Video

டெல்லி: ஆட்சிக்கு வந்த முதல் நாளே, ரபேல் ஊழல் பற்றிதான் விசாரணை நடத்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சி தேசிய தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் பற்றி விசாரிக்கப்படும். குறிப்பாக ரபேல் போர் விமான கொள்முதல் பற்றி விசாரிக்கப்படும்.

எந்த சூழ்நிலைகளில் ஊழல்வாதிகள் இந்த நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர் என்பது பற்றியும் விசாரிப்போம். அவர்களை இந்தியாவிற்கு திரும்ப அழைத்துவர உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை துவங்குவோம்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் குறைபாடுகள் நீக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அதிக நேரம் உரையாற்ற தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவில் வாய்ப்பு வழங்குவோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications