நான் ஒரேயொரு கேள்வி கேட்கிறேன்..பதில் சொல்லுங்கள்.. மோடியை தெறிக்கவிடும் ராகுல் காந்தி!
நல்ல ஆண்மகனாக என்னுடைய கேள்விக்கு பதில் அளியுங்கள் என்று ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: நல்ல ஆண்மகனாக என்னுடைய கேள்விக்கு பதில் அளியுங்கள் என்று ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக ரபேல் விவகாரம் பெரிய பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. தினமும் ரபேல் தொடர்பாக காங்கிரஸ் பாஜக இடையே கடும் விவாதம் நடந்து வருகிறது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி வைத்து வரும் குற்றச்சாட்டுகள் எல்லாம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இடையில் இதில் நேரடி வாதம் நடந்துள்ளது.
நிர்மலா சீதாராமன்
ரபேல் தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் பதில் அளிக்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி இதுவரை பேசவே இல்லை.
ராகுல் என்ன சொன்னார்
இந்த நிலையில் நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ''பிரதமர் மோடி என்னை பார்த்து பயந்து ஓடுகிறார். மோடியால் ரபேல் விவாதத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் அவர் நிர்மலா சீதாராமனை துணைக்கு அழைத்துள்ளார். தன்னால் பேச முடியவில்லை என்றதும், அவர் பெண் ஒருவரை தன்னை காக்கும்படி அழைத்துள்ளார்'' என்று கூறினார்.
என்ன பதில்
இதற்கு பதில் அளித்த பாஜக கட்சியினர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண் சமூகத்தை இழிவாக பேசிவிட்டார். பெண்ணின் உதவியை மோடி வேண்டுகிறார் என்று கூறி அவர் பெண்களை கிண்டல் செய்துள்ளார் என்று கூறினார்கள். அதோடு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
|
ராகுல் பதில்
தற்போது இதற்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். அதில் ''முழு மரியாதையுடன் ஒரு விஷயம் சொல்கிறேன். பெண்களை மதிப்பது நம்முடைய வீட்டில் இருந்து தொடங்குகிறது. நீங்கள் இப்படி சுற்றிக்கொண்டு இருக்காமல், நல்ல ஆணாக எனக்கு பதில் சொல்லுங்கள், நீங்கள் ரபேல் ஒப்பந்தத்தில் தலையிட்ட அதை மாற்றிய போது விமான படையோ, பாதுகாப்பு துறையோ உங்களை கேள்வி எழுப்பியதா? ஆமா? இல்லையா? சொல்லுங்கள்'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.