இதுவா, ஆசியாவின் பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்கா.. மோடி சொன்னது பெரிய தப்பு- ராகுல் காந்தி
டெல்லி: மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மெகா சோலார் திட்டம் ஆசியாவிலேயே மிகப் பெரியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது உண்மைக்குப் புறம்பான தகவல் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மத்திய பிரதேச மாநிலத்தில் ரேவா சோலார் மின்சார திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். 750 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்ட நிலையம் இது ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ட்வீட் வெளியிட்டிருந்தார்.

மோடி ட்வீட்
மோடி வெளியிட்ட ட்வீட்டில், மத்திய பிரதேசம், நர்மதை நதிக்கும், வெள்ளை புலிகளுக்கும் பெயர் பெற்றதாக விளங்கியது. இனிமேல் ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி நிலையத்துக்கும் பெயர் பெற்றதாக விளங்கப் போகிறது என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான், ராகுல் காந்தி இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார்.

ராகுல் காந்தி விமர்சனம்
'அசத்தியாகிரகி' என்ற ஹிந்தி வார்த்தையை அதில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அர்த்தம், உண்மையை நம்பாதவர் அல்லது பொய் சொல்பவர் என்பதாகும். அதாவது நரேந்திர மோடி இந்த விஷயத்தில் உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்தார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு அவர் கூறுவதற்கு காங்கிரஸ் கட்சியிடம் ஒரு காரணம் இருக்கிறது.

கர்நாடகாவில் 2000 மெகாவாட்
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே. சிவகுமார் இதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர். அவர் கூறுகையில், ரேவா சோலார் பார்க் 250 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்டது. இதை எப்படி ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி நிலையம் என்று மத்திய அரசு கூறுகிறது என்பதற்கு விளக்கம் தேவைப்படுகிறது. ஏனெனில் கர்நாடக மாநிலம், பாவகடா பகுதியில் உள்ள சூரிய மின்சக்தி நிலையம் 2000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடியது. இரண்டு வருடங்கள் முன்பாக இது திறக்கப்பட்டது. இவ்வாறு சிவகுமார் தெரிவித்தார்.
Recommended Video

யூனிட் விவகாரமா
மத்திய அரசு எதற்காக இப்படி சொன்னது? கர்நாடகாவில் உள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் பற்றி பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதா, இல்லையா என்பது பற்றி எதுவும் இதுவரை தெரியவில்லை. மத்திய அரசு இதற்கு என்ன பதில் கூற உள்ளது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேநேரம் பாஜக ஆதரவாளர்களோ, பாவகடா சிங்கிள் யூனிட் கிடையாது. ரேவா சிங்கிள் யூனிட் என்பதால், மோடி இவ்வாறு கூறியதாக பதில் தெரிவிப்பதை கவனிக்க முடிகிறது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications