ஆக்சிஜன் பற்றாக்குறையால்.. நோயாளிகள் உயிரிழப்புக்கு மோடி அரசுதான் காரணம்.. விளாசி தள்ளும் ராகுல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக பலர் தொடர்ந்து இறந்து வருகின்றனர். இந்த நிலைக்கு மத்திய அரசுதான் காரணம் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

Recommended Video

    ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழப்பு… மத்திய அரசுதான் காரணம்... ராகுல் பகீர்!

    கடந்த ஆண்டை விட இந்த 2021-ம் ஆண்டு இந்தியாவை வச்சு செய்து வருகிறது. இதுக்கு கடந்த ஆண்டே பரவாயில்லை என்பதுபோல் ஓயாத கொரோனா மக்களை துன்பப்படுத்தி வருகிறது.

    ஏளனமாக சிரிக்கும் கொரோனா

    ஏளனமாக சிரிக்கும் கொரோனா

    போன வருடம் கொரோனவை ஒழிக்க தடுப்பு மருந்துகள் கைவசம் இல்லை. ஆனாலும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதிய படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் இருந்தன. ஆனால் இந்த முறை நமது கையில் தடுப்பு மருந்துகள் இருந்தாலும் கொரோனா நம்மை ஏளனமாக பார்த்து சிரிக்கிறது.

    தொடர் உயிரிழப்பு

    தொடர் உயிரிழப்பு

    மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் உள்ளிட்ட போதிய வசதிகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத கையறு நிலை போன்றவையே கொரோனா நம்மை ஏளனமாக பார்த்து சிரிப்பதற்கு காரணம். ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    மத்திய அரசு முயற்சி

    மத்திய அரசு முயற்சி

    மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாட்டை தீர்க்க முயற்சித்தல், விமானம், ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு வந்து பிரச்சினையை சமாளிக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை மத்திய அரசு சரியாக கையாளவில்லை. இந்த பேரழிவு நிலைக்கு இதுதான் காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    மத்திய அரசுதான் காரணம்

    மத்திய அரசுதான் காரணம்

    ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் மத்திய அரசை கடுமையாக வறுத்தெடுத்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. இது தொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- " கொரோனா தொற்று நோயாளிகளின் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக பலர் தொடர்ந்து இறந்து வருகின்றனர்.. மத்திய அரசே இந்த நிலை உங்களால்தான் ஏற்பட்டது" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+