எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்.. ஆம் ஆத்மி புறக்கணிப்பு
டெல்லி: பெகாசஸ் பிரச்சனை மற்றும் விவசாயிகளின் போராட்டம் ஆகியவற்றால் நாடாளுமன்றத்தின் இரு அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காலை உணவு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதில், எதிர்க்கட்சிகள் இணைந்து, நிழல் நாடாளுமன்றம் பாணியில் கூட்டத் தொடர் நடத்துவது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐ.யு.எம்.எல், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, கேரளா காங்கிரஸ் (எம்), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாட்டு கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், லோக்தந்திரிக் ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிகள் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வியூகக் கூட்டங்களில் அதிலும், குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டங்களில் ஆம் ஆத்மி எப்போதும் விலகியே இருந்து வருகிறது. அதேநேரம், கடந்த காலத்தைப் போலல்லாமல், காங்கிரஸ் சற்று இறங்கி வந்து, இந்த கூட்டத்திற்கு ஆம் ஆத்மிக்கும் சேர்த்துதான் அழைப்புவிடுத்தது. ஆனாலும் ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை.
இந்த பிரேக் ஃபாஸ்ட் ஆலோசனையின்போது, உரையாற்றிய ராகுல் காந்தி "இந்த சக்தியை நாம் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எனது மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று. இந்த மக்கள் குரல் எவ்வளவு அதிகமாக ஒன்றிணைகிறதோ, அந்த குரல் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறும், பிஜேபி-ஆர்எஸ்எஸ்சுக்கு அதை அடக்குவது மிகவும் கடினமாகிவிடும்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 அன்று தொடங்கியது. முதல் இரண்டு வாரங்களில் 107 மணிநேரங்களில் பாராளுமன்றம் 18 மணிநேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. தடைகள் காரணமாக ரூ.133 கோடி வீணாகத்தான் செலவாகியுள்ளது.
இதனிடையே, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸின் மல்லிகார்ஜுன் கார்கேவை நேற்று அழைத்து ஆதரவு தர கோரினார்.
பெகாசஸ் வேவு விவகாரம் மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், நீதிபதிகள், ஆர்வலர்கள் மற்றும் அமைச்சர்கள் கூட பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் காரணமாக எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications