திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை நாளை ராகுல்.. பிரியங்கா காந்தி சந்திக்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் டெல்லியில் உள்ள திகார் சிறையில் கடந்த ஆகஸ்ட் இறுதி வாரம் தொடங்கி தற்போது வரை சுமார் 3மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளார்.

Rahul Gandhi & Priyanka Gandhi to meet P Chidambaram at Tihar Jail, tomorrow

அவருக்கு சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த போது அமலாக்கத்துறை வழக்கில் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் சிதம்பரம் இதுவரை சிறையில் இருந்து வெளியே வரவில்லை. உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை நாளை சந்திக்க உள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+