விவசாயிகள் போராட்டம்: எத்தனை பேர் இறந்தார்கள்? .. உங்களிடம் விவரம் இல்லை.. இந்தாங்க லிஸ்ட்.. ராகுல்
டெல்லி: விவசாயிகளுக்கு உரிமைகள், வேலைவாய்ப்புகள், இழப்பீடுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 6ஆவது நாளான இன்று மாநிலங்களவை பல்வேறு அமளிகளால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மக்களவையில் விவசாயிகள் பிரச்சினையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசி வருகிறார்.
அவர் கூறுகையில் விவசாயிகள் போராட்டத்தின் போது 700 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடமும் விவசாயிகளிடமும் மன்னிப்பு கோரினார்.

பிரதமர் ஒப்புக் கொண்டார்
இதன் மூலம் அவர் தனது தவறை ஒப்புக் கொண்டுவிட்டார். கடந்த மாதம் 30-ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் எத்தனை பேர் இறந்தனர் என மத்திய வேளாண் துறை அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தங்களிடம் அதுகுறித்த தரவுகள் (டேட்டாக்கள்) இல்லை என்றார். பஞ்சாபை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ரூ 5 லட்சம் இழப்பீட்டை காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் அரசு வழங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு
அது போல் 152 பேரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும் கொடுத்துள்ளது. என்னிடம் அதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது. ஹரியானாவில் இறந்த 70 விவசாயிகளின் விவரங்கள் அடங்கிய மற்றொரு பட்டியலையும் நாங்கள் வைத்துள்ளோம். ஆனால் மத்திய அரசோ பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர்கள் தங்களிடம் இல்லை என தெரிவிக்கிறது. இந்த பட்டியலை நான் மக்களவையில் தாக்கல் செய்கிறேன்.

இழப்பீடு
விவசாயிகளுக்கு உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இழப்பீடும் வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு மக்களவையில் ராகுல் காந்தி விவசாயிகள் குறித்த பிரச்சினைகளை பேசியிருந்தார். 3 வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகள் ஓராண்டாக போராட்டம் நடத்திவந்தனர்.

விவசாயிகள் உயிரிழப்பு
பல கட்ட பேச்சுவார்த்தைகளை மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்தியும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் வெயில், கடும் குளிர் உள்ளிட்டவற்றால் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துவிட்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் 3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெற்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications