Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல் ஆவேசமாக பேசியபோது பொறுமையிழந்து பொங்கிய மத்திய அமைச்சர்.. குறுக்கே எழுந்து நின்று.. ஒரே அமளி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மணிப்பூர் வன்முறை குறித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது இன்று ராகுல் காந்தி ஆக்ரோஷமாக பேசினார். அப்போது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குறுக்கீட்டு ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க கூறினார். இருப்பினும் ராகுல் காந்தி கண்டுக்கொள்ளாமல் பேசி கொண்டிருந்தார். இதனால் சபையில் கடும் அமளியோடு கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது.

மணிப்பூர் வன்முறையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. இந்நிலையில் தான் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

Rahul Gandhi Should be seeks apology, says Kiran Rijiju

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று 2வது நாளாக விவாதம் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் தனது உரையின் தொடக்கத்திலேயே அதானி பெயரை உச்சரித்து அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:

சில நாட்களுக்கு முன்பு நான் மணிப்பூர் சென்றிருந்தேன். ஆனால் பிரதமர் மோடி இன்று வரை செல்லவில்லை. ஏனென்றால் மணிப்பூர் இந்தியாவில் இல்லை என அவர் நினைக்கிறார் நீங்கள் மணிப்பூரை இரண்டு துண்டுகளாக துண்டாக்கி உள்ளீர்கள். மணிப்பூரை பிரித்து உடைத்து உள்ளீர்கள். மணிப்பூர் கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டது.

மணிப்பூரில் பாரத மாதாவை படுகொலை செய்துவீட்டீங்கள். மணிப்பூர் மக்களை கொன்றதால் பாரததாயை நீங்கள் கொன்றுவீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல தேசதுரோகிகள். இந்திய ராணுவத்தால் அங்கு ஒரே நாளில் அமைதியை கொண்டு வர முடியும். ஆனால் நீங்கள் அதனை செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் குரலை கேட்கவில்லை என்றால் அவர் யாருடைய குரலை கேட்பார்'' என ஆக்ரோஷமானார்.

இதற்கு மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கோஷமிட்டனர். அப்போது திடீரென மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலையீட்டு ‛‛ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்'' என்றார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது ஒருபுறம் இருக்க ராகுல் காந்தி தொடர்ந்து எதையும் கண்டுக்கொள்ளாமல் மணிப்பூர் விவகாரம் குறித்து தனது ஆதங்கத்தையும், வருத்தத்தையும் பதிவு செய்தார். இதனால் லோக்சபாவில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+