டால்ஸ்டாய் என்ன சொல்றார்னா.. ராகுல் காந்தியின் சஸ்பென்ஸ் டிவீட்!
டெல்லி: மத்தியப் பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நொடிக்கு நொடி எகிறிக் கொண்டே போகும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு டிவீட்டைப் போட்டு சூட்டை அதிகரித்துள்ளார்.
ம.பி. முதல்வர் பதவிக்கான போட்டியில் இளம் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் மூத்த தலைவர் கமல்நாத் ஆகியோர் உள்ளனர்.
இருவரில் யாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று தெரியவில்லை. குழப்பத்தைத் தீர்க்கும் பணியில் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் ராகுல் காந்தி ஒரு டிவீட் போட்டுள்ளார்.
அதில் காலமும், பொறுமையும் இருபெரும் வீரர்கள் - லியோ டால்ஸ்டாய் என்று போட்டுள்ளார். அந்தப் படத்தில் ஒரு பக்கம் சிந்தியா மற்றும் மறுபக்கம் கமல்நாத்துடன் கை கோர்த்தபடி காணப்படுகிறார் ராகுல் காந்தி.
என்ன சொல்ல வருகிறார் ராகுல் ஜி??
Comments
rahul gandhi delhi kamal nath congress madhya pradesh ராகுல் காந்தி மத்தியப் பிரதேசம் கமல்நாத் டெல்லி காங்கிரஸ்
English summary
Congress president Rahul Gandhi has Tweeted about the current fiasco of MP CM issue with a Tolstoy quote.
Story first published: Thursday, December 13, 2018, 20:21 [IST]